(லியோன்)
மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் கல்லடி – டச்பார் புனித இன்னாசியார் ஆலய வருடாந்த திருவிழா கடந்த 29.07.2017 வெள்ளிக்கிழமை மாலை 05.30 மணியளவில் பங்கு தந்தை அருட்பணி ரோஷன் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது .
ஆலய திருவிழா நவநாள் காலங்களில் விசேட திருப்பலியும் திவ்விய நற்கருணை வழிபாடுகளும் , மறைவுரைகளுடன் நடைபெற்றது .
05 ஆம் திகதி சனிக்கிழமை மாலை புனிதரின் திருச்சுருவ பவனியும் தொடர்ந்து விசேட திருப்பலியும் ஒப்புகொடுக்கப்பட்டது
திருவிழா திருப்பலி (06) ஞாயிற்றுக்கிழமை காலை 07.00 மணிக்கு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் தலைமையில் திருப்பலி ஒப்புக்டுக்கப்பட்டு திருப்பலியின் பின் கொடியிறக்கத்துடன் ஆலய வருடாந்த திருவிழா நிறைவு பெற்றது .
இந்த திருவிழா திருநாள் திருப்பலியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பகுதி மக்கள் கலந்து சிறப்பித்தனர்
0 facebook-blogger:
கருத்துரையிடுக