திங்கள், 7 ஆகஸ்ட், 2017

பௌர்ணமி தினமான இன்று இரவு வானில் நிகழவுள்ள அதிசயம்

பௌர்ணமிதினமான இன்று 8ஆம்திகதி சந்திர கிரகணம் நிலவுவதால் சிவந்த நிறத்திலான நிலவை காணக்கூடியதாக இருக்கும் என்று ஆதர்சிகிளார்க்மத்திய நிலையம் அறிவித்துள்ளது. 


இருப்பினும் இந்த சந்திர கிரகணத்தை இலங்கையில் முழுமையாக காணக்கிடைக்காது என்றும் சந்திரகிரகணத்தின் இறுதிக்கட்டத்தை மாத்திரம் காணமுடியுமென்றும் அந்நிலையம் அறிவித்துள்ளது.இலங்கை நேரப்படிபிற்பகல் 1.46 முதல் 7.04வரை சந்திர கிரகணம் தென்படும் என்றும் அந்த மத்திய நிலையம் அறிவித்துள்ளது. 


வடக்கு மற்றும் தென்அமெரிக்க நாடுகளிலும் அவுஸ்திரேலியா ஜப்பான் கொரியா உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளிலும் இந்த சந்திர கிரகணத்தை முழுமையாக காணலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திரக்கிரணகம்க காரணமாக பௌர்ணமி தினத்தன்று இரவு சிவந்த நிலவைக் காணலாம் என்றும் இதற்கு ரெட்மூன் என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624919

Translate