காரைதீவுப் பிரதேச செயலகத்திற்கு உட்பட்டவர்களில் கைப்பணிப் பொருட்கள் தயாரித்தலில் ஆர்வம்கொண்டவர்களுக்கான பயிற்சிப் பட்டறையானது விதாதா வள நிலையத்தின் அனுசணையில் அண்மையில் இடம்பெற்றது.
இப் பயிற்சிநெறியில் விஞ்ஞான தொழிநுட்ப உத்தியோகத்தர் திருமதி. சுபாஜினி ஜெகராஜன் மற்றும் கிராமியபொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.கு.ஜெயராஜி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். வளவாளராக திரு. ச. விஜிதகுமார் கடமையாற்றினார். பிரதேச செயலாளர் திருமதி. சுதர்சினி சிறிகாந்த் அவர்களின் வழிகாட்டலின்கீழ் இப் பயிற்சிப் பட்டறை இடம்பெற்றது.









0 facebook-blogger:
கருத்துரையிடுக