ஞாயிறு, 12 ஜூன், 2016

மகிழூர்முனை மண்டபத்தடி முத்துமாரி அம்பாளின் வருடாந்த திருச்சடங்கு

(ரேவநிசாந்

திருமூலரால் சிவபூமி எனப் போற்றப்பட்ட இலங்கைத்திருநாட்டில் பத்தினி தெய்வ வழி பாட்டில் சிறப்புற்று விளங்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முணை தென்எருவில்பற்று பிரதேச  செயலகபிரி விக்குட்பட்ட மகிழூர் முனை 110வீ கிராமத்தில் வங்கக்கடல் அலையோசை வரவேற்று நிற்க வாவிமகள் முத்திசையும் சூழ்ந்து எழில் பரப்ப சேற்றினிலே வெண் தாமரை செங்கதிரோனை வரவேற்று நிற்க ஏர் புரண்டு விளையாடி ஏற்றம் தரும் நெல்மணிகள் விளையூராம் மகிழூர்முனை மண்டபத்தடி பதியினிலே அமர்ந்திருந்து அருள் வழங்கி கொண்டிருக்கும் அன்னை முத்துமாரி அம்பாளுக்கு வருடாந்த திருச்சடங்கு விழா நிகழும் துர்முகிவருடம் வைகாசித்திங்கள் 32ம் நாள் 14.06.2016 செவ்வாய்க்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாக உள்ளது.





ஆனித்திங்கள் 6ம் நாள் 20.06.2016  திங்கட்கிமை அதிகாலை அன்று தீ மிதிப்பு இடம்பெற்று கன்னிமார்களுக்கான அன்ன பூசையினை தொடர்ந்து திருக்குளிர்த்திபாடி மாரியம்மன் கும்பம் சொரிந்து தீர்த்தமாடுதலுடன்  உற்சவம் இனிதே நிறைவடைய இருக்கின்றது.

     

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624942

Translate