புதன், 24 பிப்ரவரி, 2016

கல்முனை ஆதார வைத்தியசாலை உத்தியோகத்தர் மீது தாக்குதல்

(Visho)
கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடமை நேரத்தில் இதய துடிப்ப பதிவு தொழில்நுட்பவியலாளர் ச.கிருஸ்ணகுமார் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அவரது கடமை அறையில் அத்துமீறி உட்புகுந்த வெளியார் ஒருவர்,; திடீர் தாக்குதல் நடாத்தியது சம்பந்தமாக பாதிக்கப்பட்டவரால் கல்முனைப பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.எனினும் தாக்கியவர் இரு நாட்கள் கடந்த நிலையிலும் இதுவரை கைது செய்யப்படவில்லையென பாதிக்கப்படடவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். வைத்தியசாலை நிர்வாக நடவடிக்கைகளும் மந்தகதியில் இடம் பெறுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த வைத்திய அலகில் இடம்பெற்ற கடமை ஒதுக்கீடு சம்பந்தமாக தாக்குதலுக்குள்ளானவருக்கும், அதே அலகில் பணிபுரியும் இன்னொரு பெண் உத்தியோகத்தருக்குமிடையே எழுந்த பிரச்சனை தொடர்பாகவே இத் தாக்குதல் சம்பவம்இடம் பெற்றிருக்கலாமென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பிரச்சனை குறித்து பொது இணக்கப்பாடடிற்கு வந்து கொண்டிருந்நத வேளையிலேயே இத் தாக்குதல் சம்பவம் இடம் பெற்றதாக பாதிக்கப்படவர் தெரிவிக்கின்றார்.அது ஒரு அவசியமற்ற கண்மூடித்தனமான நாகரீகமற்ற சட்ட திட்டங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தாக்குதல் என அவர் தெரிவிக்கின்றார்.சும்பவ தினத்தில் இருந்து அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவரும் அவர் கைவிரலில் ஏற்பட்ட காயத்திற்காகவும் முகத்தில் தாக்கியதால் உட் தலையும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்;. இதற்காக அம்பாரை வைத்தியசாலைக்கும் செல்ல வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

இதனால் படித்துக் கொண்டிருக்கின்ற தனது 3 பிள்ளைகளும் மனைவியும் உளப் பாதிப்பிற்குள்ளாகியதாகவும் அவர் தெரிவித்தார்;நல்லாட்சி நிலவுகின்ற காலத்தில், ஆதார வைத்தியசாலையில் கண்காணிப்பு கமராக்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில். பாதுகாப்பு ஊழியர்கள் கடமையில் இருக்கும் வேளையில், தாக்கியவர் ஒரு அரச உத்தியோகத்தராக இருந்த போதும,; நடைபெற்ற இத் துர்ப்பாக்கிய சம்பவம் தொடர்பாக தமக்கு துரிதமாக நீதி கிடைக்கவேண்டுமென பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் கோரிக்கை விடுக்கின்றனர்.

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624938

Translate