தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஜயாவுக்கு எதிர்கட்சி தலைவர் பதவி கிடைத்தது தமிழ் மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என சுதந்திர கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் சாணக்கியன் தெரிவித்துள்ளார். அண்மையில் தனது அலுவலகத்தில் சமகால அரசியல் குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்,
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நல்லாட்சியில் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தமிழ் மக்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தாத வகையிலான விதத்தில் தீர்வு வழங்க வேண்டும் எனும் நிலையில் உள்ளார். நாட்டிற்குள் பிளவுபடாத வகையில் தமிழ்மக்களுக்கு தீர்வு கொடுக்க வேண்டும் என்பதில் நல்லாட்சி செயற்பட்டுவருகின்றது. அதற்காக பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டு புதிய யாப்பினை அடுத்த வருடம் கொண்டுவர உள்ளது. தமிழ் மக்களின் தலைவனாக சம்பந்தன் ஐயா இராஜதந்திர ரீதியில் அரசாங்கத்தோடு அவதானமாக செயற்பட்டு தமிழ் மக்களுக்கான மீளப்பெற முடியாத தீர்வினை பெறுவதில் மும்முரமாக செயற்பட்டு வருகின்றார். அத்தோடு கூட்டமைப்பில் உள்ள அரசியல் வாதிகளும் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் திண்ணமாக உள்ளார்கள். இந்த நல்லாட்சியில் தமிழர்களாகிய எமக்கு மீளப்பெற முடியாத அரசியல் தீர்வினை ஜனாதிபதி அவர்கள் வழங்குவார் என்பதில் நான் உறுதியாகவுள்ளேன் எனவும் எதிர்கட்சி தலைவராக இருந்து மக்களுக்கு இனனும் பல சேவைகளை செய்யலாம் எனவும் தெரிவித்தார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக