ஞாயிறு, 25 டிசம்பர், 2016

தேற்றாத்தீவில் வாகனவிபத்து ஒருவர் பலி --சீ.சீ.ரிவி கமராவில் பதிவு

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் தேற்றாத்தீவு கொம்புச்ந்திப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை 8.53 அளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்தில் மட்டக்களப்பு மாங்காடு கிராமத்தைச் சேர்ந்த 36 வயதுடைய சிவகுரு ரமேஸ் என்பவரே உயிரிழந்துள்ளார்.

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு கொம்புச் சந்தியிலுள்ள மஞ்சள் கடவை ஊடாக துவிச்சக்கர வண்டியில் கடக்க முற்பட்ட போது, களுவாஞ்சிகுடியில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேரூந்து மேதியதிலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தில் சிவகுரு ரமேஸ் என்பவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.  
இந்த விபத்துச் சம்பவம் பிள்ளையார் ஆலய சீசீரீவி கமராவில் பதிவாகியுள்ளதாக களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624969

Translate