Thirugnanasampanthan Lalithakopan
1. தத்தி – குழு / ஆட்கள்
தத்தி தத்தியாய் பிள்ளைகள் வருகிறார்கள் .....
அவனிலை கை வையாத .... தத்தி கூடின ஆள் அவன் ....
இதை விட மட்டக்களப்பின் விவசாயிகள் தங்கள் மாடுகளை குழுவாக மேய்க்கும்போது அதனை தத்தி மாடு மேய்த்தல் என்றே கூறுவர்.பத்து விவசாயிகள் சேர்ந்து ஒரு தத்தி அமைத்தால் ஒருநாளைக்கு குழுவின் ஒருவர் தத்தி மாடுகளுக்கு மேய்ச்சல் பொறுப்பாளியாவார்.
2. வகுத்துவார் – பகுதியார்/ குடும்பத்தார்
மட்டக்களப்பின் கோவில் உற்சவங்கள் மற்றும் பூசைகள் குடி அடிப்படையிலேயே இடம்பெறும்.ஒரு குடி பல வகுத்துவார்களை அல்லது பெரிய குடும்பத்தினரை கொண்டது.வைரரின் வகுத்துவார்/ வெள்ளையரின் வகுத்துவார் என கதையாடல்கள் காணப்படும்.
ஒரு கோவிலில் ஒரு குடிக்கு நிறைய பூசைகள் இருந்தால் அதை அவர்கள் இன்ன வகுத்துவாருக்கு இன்ன பூசை என பகுத்து பிரிப்பர்.
3. கென்னை – மூலை முடுக்கு
இது கொல்லை என்ற பொருளில் பயன்படுத்தப்படும்.
"நீ எந்த கென்னையில இருந்தாலும் உன்ன விடமாட்டன்"
4. நாசமறுப்பு – கரைச்சல் / தொல்லை
'விடிய வெள்ளன என்ன நாசமறுப்பு இது'
5. கச்சால் – பிரச்சினை
'உன்ர மச்சான் என்ன கச்சால் போடுறான்'
6. உத்தியோகாராக்கள் – முன்னோர் / பிதிரர்கள்
புரட்டாதி மாதத்தில் அமரர் நினைவாய் இடம்பெறும் மஹாளய வழிபாடுகளை மட்டக்களப்பு பகுதியில் உத்தியோகாராக்களுக்கு செய்வது என்றே பொதுப்படையாக குறிப்பிடுவர்.உண்மையிலேயே இந்த சொல் வேடுவர்களால் தங்கள் முன்னோர்களை குறிப்பிட பயன்படுத்திய 'உத்தியாக்கள்" என்ற சொல்லில் இருந்தே மருவியிருப்பதாய் கூறுவர்.
7. பூணாரம் – ஆபரணம்
'புரிசன் செத்து ஆண்டு கழியல்ல என்ன பூணாரம் வேண்டி கிடக்கு இவக்கு"
8. காலை – பயிர்தோட்டங்களை இந்த பெயரினால் அழைத்தல் இங்கு மரபு.
'இந்த போகம் காலைக்குள்ள என்ன நாட்டினாய்"
இதை விட மாடு கலைக்கும்போது "காலை காலை' என்று விளித்து கலைப்பர்.
9. வாரி – விளைச்சல்
'அண்ணனுக்கு இந்த முறை நல்ல வாரி போல கிடக்கு"
10. சூறு- திமிர்
'முளைச்சு நாலு இல விடல்ல அவனின்ர சூறை பார்"
11. சுள்ளாப்பு- சுட்டிதானம்
'அந்த வெள்ள கண்டு(கன்றுக்குட்டி) நல்ல சுள்ளாப்பாய் இருக்கு.
12. தனகுதல் – வம்பை விலைக்கு வாங்குதல்
'வேலையால களைச்சு போய் வாற மனிசனோட நீ தனகாத"
13. உரஞ்சுவாரம்
14. தனகுவாரம்
இந்த இரண்டு சொற்களும் கூட வலிந்து சண்டைக்கு போதல் அல்லது வம்பை விலைக்கு வாங்குதலையே குறிக்கும்.
"சும்மா போற பெடியனோட உனக்கு என்ன தனகுவாரம் வேண்டி கிடக்கு'
14. தனகுவாரம்
இந்த இரண்டு சொற்களும் கூட வலிந்து சண்டைக்கு போதல் அல்லது வம்பை விலைக்கு வாங்குதலையே குறிக்கும்.
"சும்மா போற பெடியனோட உனக்கு என்ன தனகுவாரம் வேண்டி கிடக்கு'
15.இருட்டோட – இருட்டு ஓட அதாவது காலையில்
'விடியட்டும் ... இருட்டோடையிலேயே சந்தைக்கு போகணும்'
'விடியட்டும் ... இருட்டோடையிலேயே சந்தைக்கு போகணும்'
16.ஆண்டுல மூண்டில – எப்போதாவது
"ஆண்டுல மூன்டிலயாவது ஊருக்கு வாவனடா மனே'
"ஆண்டுல மூன்டிலயாவது ஊருக்கு வாவனடா மனே'
17.மனே- மகனே அல்லது மகளே என்பதன் சுருங்கிய வடிவம்.இந்த பகுதியில் இது பொதுவான விளிப்பு குறியீடு.
'என்ன மனே இந்த பக்கம்'
'என்ன மனே இந்த பக்கம்'
18.கிட்டடியில – அண்மையில்
'கொக்குநாரைக்கு கிட்டடியிலதான் நம்மட வட்டையும் கிடக்கு'
'கொக்குநாரைக்கு கிட்டடியிலதான் நம்மட வட்டையும் கிடக்கு'
19.வப்பாசியில் ஏத்துதல்- பப்பாசியில் ஏத்துதல் என்பதன் மருவிய வடிவம்.இதன் பொருள் நன்கு கதைத்து ஏமாற்றுதல் என்பதாகும்.
'இவனுகள நம்பாத புள்ள.கொஞ்சம் அசந்தாலும் உன்ன வப்பாசியில ஏத்தி போடுவானுகள்"
'இவனுகள நம்பாத புள்ள.கொஞ்சம் அசந்தாலும் உன்ன வப்பாசியில ஏத்தி போடுவானுகள்"
20.உறண்டல்- மெலிந்த
உரைநடை வழக்கில் தொத்தலும் வத்தலும் என்ற பதத்துக்கு இணையானது.
'பெட்ட வடிவுதான் .ஆனால் ஆள் கொஞ்சம் உறண்டல்.இனி உன்ர முடிவுதான்"
உரைநடை வழக்கில் தொத்தலும் வத்தலும் என்ற பதத்துக்கு இணையானது.
'பெட்ட வடிவுதான் .ஆனால் ஆள் கொஞ்சம் உறண்டல்.இனி உன்ர முடிவுதான்"
21.அவிஞ்சு போதல்- பணிந்து போதல்
'உன்ர புரிசன்ர கதைக்கு எல்லாம் அவிஞ்சு போக ஏலாது கண்டியோ'
'உன்ர புரிசன்ர கதைக்கு எல்லாம் அவிஞ்சு போக ஏலாது கண்டியோ'
22.கண்டியோ – மட்டக்களப்பின் கிராமப்புறங்களில் அதிகமதிகம் புழக்கத்தில் உள்ள சொற்றொடர் இது.இதன் பொருள் 'சரியோ' என்பதாய் அமையும்.
23.வெறுவாக்கிலம் கெட்டதுகள் – யாரையும் திட்டுகையில் இந்த சொற்றொடர் பாவிக்கப்படுவதுண்டு.இதன் அர்த்தம் ஒன்றுமற்றதுகள் அல்லது நாதியற்றவர்கள் என்பதாகும்.
24.காட்டுக்கு போதல் – மலசல கூடங்கள் பாவனைக்கு வரும் முன்னர் கிராமங்களை அண்டிய காடுகளிலேயே மக்கள் தங்கள் காலை கடன்களை நிறைவேற்றினர்.ஆகவே இதற்கான குறியீட்டு பெயராக காட்டுக்கு போதல் நிலை பெற்றிருந்தது.
25.சோட்டை – ஆசை
'மச்சான காணவும் சோட்டையாய் கிடக்கு'
'மச்சான காணவும் சோட்டையாய் கிடக்கு'
நட்புக்களே இந்த சொல்லாடல்களில் அதிகமானவற்றை அம்மம்மாவுடன் நான் வாழ்ந்த காலங்களிலேயே அதிகம் பழகி கொண்டேன்.இன்று அம்மம்மாவும் இல்லை.இந்த சொற்களும் புழக்கத்தில் இல்லை.அம்மம்மாவுடன் இருந்த காலங்கள் மறக்க முடியாதவை......
நினைவுகள் மீள்கையில் இன்னும் வரும்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக