கிழக்கின் இளைஞர் முன்னணியமைப்பானது குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பிரதேசங்களில் தனது கல்விச்சேவையை வழங்கிவருகின்றது. அதனடிப்படையில் முன்னணியின் தலைவர் கணேசமூர்த்தி கோபிநாத் அவர்களின் தலைமையில் கடந்த பங்குனி மாதம் ஆரம்பிக்கப்பட்டிருந்த (க.பொ.த) சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களிற்கான இலவசக்கல்விக் கருத்தரங்கு தொடரின் 2ம் தொடர் நேற்றைய தினம்(24.06.2017) கோவில்போரதீவு விவேகானந்தா மகாவித்தியாலயத்தில் ஆரம்பமாகியது. படுவான்கரை பிரதேசத்தில் காணப்படும் பாடசாலைகளினை ஒன்றிணைத்து இக்கருத்தரங்கு நடாத்தப்பட்டிருந்தது.
முந்நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றிய இக்கருத்தரங்கில் முதலாம் நாளான நேற்று வரலாறுஇமற்றும் தமிழ் ஆகிய பாடங்களிற்கான தெளிவூட்டல்கள் இடம்பெற்றிருந்தன. குறித்த பாடங்களில் பிரபலமான ஆசிரியர்களான த.ஐங்கரன் ஆசிரியர் மற்றும் சா.பத்மகுமார் ஆசிரியர் ஆகியோரால் குறித்த பாடங்களிற்கான விளக்கவுரைகள் வழங்கப்பட்டிருந்தது. இன்று(25.06.2017) விஞ்ஞானம்இகணிதம் ஆகிய பாடங்களிற்கான கருத்தரங்கு இடம்பெறவிருக்கின்றது.
தடைகளை உடைத்து எம் தமிழ் மாணவர்களினை கல்வியில் முன்னேற்றச் செய்வதே எனதும்இஎங்களுடைய முன்னணியினதும் முழு மூச்சான முயற்சியாகும் என முன்னணியின் தலைவர் கணேசமூர்த்தி கோபிநாத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இன்று எமது தமிழ் சமூகத்தின் தேவைகள் பற்றி கதைத்துக்கொண்டே இருப்பதற்கு பலர் காணப்படுகின்ற போதும் அவர்களிற்கான தேவைகளினை நிறைவேற்றுவதற்கான ஆக்கபூர்வமான செயல்களை செய்பவர்களாக மாற வேண்டும். எமது தமிழ் சமூகம் முன்னேற இன்று எம்மிடம் உள்ள ஒரே பாதை கல்வி. அப்பாதையில் உள்ள தடைகளினை என்னால் இயன்றவரை அகற்றுவதற்கான சகல முயற்சிகளினையும் நான் மேற்கொள்வேன். ஒரு சேவையினை வழங்கும் போது தேவை உள்ள இடத்தினை அறிந்து அச் சேவையினை வழங்க வேண்டும் அதுவே சிறந்த பலனை வழங்கும். அந்தவகையிலே நாங்கள் இவ் இலவசக் கல்விக் கருத்தரங்கினை படுவான்கரை பிரதேசத்தினை மையப்படுத்தி நடாத்துகின்றோம். கடந்த ஆண்டு தொடர்ச்சியாக ஏழு கருத்தரங்கு தொடர்களினை நடாத்தியிருந்தோம்இ கடந்த ஆண்டு பரீட்சைக்கு தோற்றிய பல மாணவர்கள் தங்கள் பெறுபேறுகளினை எனக்கு அறிவித்து தங்கள் நன்றிகளையும் தெரிவித்திருந்தனர். இவ்வாறான சந்தர்ப்பங்களிலேயே எங்கள் சேவையின் பூரணத்தன்மையை உணர்கிறேன். எங்களுடைய இப் பயணம் பல கிளைகளைப் பரப்பி தொடர்ந்துகொண்டிருக்கும் என குறிப்பிட்டிருந்தார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக