காணாமல் போகச் செய்யப்பட்டோர் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்தகட்ட அமர்வு மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.
‘எதிர்வரும் திங்களன்று நடைபெறும் விசேட கூட்டத்திலேயே திகதி விவரம் பற்றி இறுதி முடிவெடுக்கப்படும்’ என்று ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
காணாமல் போகச் செய்யப்பட்டோர் தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு தனது கடந்த அமர்வை திருகோணமலையில் நடத்தியதுடுன், இதற்கு எதிராக சிவில் அமைப்புகளால் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.
மட்டக்களப்பில் இதற்கு முன்னரும் பொது அமர்வு நடத்தப்பட்டிருந்தது. அதன்போது கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காகவும் புதிய முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்காகவுமே அங்கு மீளவும் அமர்வு நடைபெறுகின்றது.
காணாமல் போகச் செய்யப்பட்டோர் தொடர்பில் விசாரணை நடத்தும் ஆணைக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பான இறுதி விசாரணை அறிக்கையை குறித்த ஆணைக்குழு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிடவுள்ளது
0 facebook-blogger:
கருத்துரையிடுக