வியாழன், 8 ஜூன், 2017

கிரான்குளம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ ஆனைவாவி கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு உற்சவத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள்


மட்டக்களப்பு கிரான்குளம் ஆனைவாவி பகுதியில் எழுந்தருளி அருளாட்சி நல்கும் கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு உற்சவமானது 06.06.2017 செவ்வாய்க்கிழமை அன்று ஆரம்பமாகி 09.06.2017 அன்று திருக்குளிர்த்தி பூசையுடன் இனிதே நிறைவடைய இருக்கின்றது.





இத்திருச்சடங்கு காலத்தில் கிராமிய வழிபாடு சார்ந்ததாக திருக்கதவு திறத்தல், கிரான்குளம் கடற்கரையிலிருந்து ஜலம் திரட்டி வந்து அபிஷேக பூசைகள் செய்து அம்பாளை கும்பத்தில் எழுந்தருளச் செய்தல், அலங்காரப் பூசைகள், விநாயகர் பானை எடுத்தல் நிகழ்வுகளும்; 2017.06.09 அன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5.00 மணிக்கு பொங்கல் நிகழ்வுகளும் காலை 6.00 மணிக்கு திருக்குளிர்த்தி பூசையும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.










Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624937

Translate