(ரேவநிசாந்)
திருமூலரால் சிவபூமி எனப் போற்றப்பட்ட இலங்கைத்திருநாட்டில் பத்தினி தெய்வ வழி பாட்டில் சிறப்புற்று விளங்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முணை தென்எருவில்பற்று பிரதேச செயலகபிரி விக்குட்பட்ட மகிழூர் முனை 110வீ கிராமத்தில் வங்கக்கடல் அலையோசை வரவேற்று நிற்க வாவிமகள் முத்திசையும் சூழ்ந்து எழில் பரப்ப சேற்றினிலே வெண் தாமரை செங்கதிரோனை வரவேற்று நிற்க ஏர் புரண்டு விளையாடி ஏற்றம் தரும் நெல்மணிகள் விளையூராம் மகிழூர்முனை மண்டபத்தடி பதியினிலே அமர்ந்திருந்து அருள் வழங்கி கொண்டிருக்கும் அன்னை முத்துமாரி வருடாந்த திருச்சடங்கு விழா நிகழும் ஏவிளம்பி வருடம் ஆனித்திங்கள் 19ம் நாள் 03.07.2017 திங்கட்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி ஆனித்திங்கள் 25ம் நாள் 09.07.2017 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அன்று தீ மிதிப்பு இடம்பெற்று கன்னிமார்களுக்கான அன்ன பூசையினை தொடர்ந்து திருக்குளிர்த்திபாடி மாரியம்மன் கும்பம் சொரிந்து தீர்த்தமாடுதலுடன் உற்சவம் இனிதே நிறைவடைய இருக்கின்றது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக