வியாழன், 31 மார்ச், 2016

பெண்களை புகைப்படம் எடுத்தவர் ஏறாவூரில் கைது


மட்டக்களப்பு, ஏறாவூரில்  வெள்ளிக்கிழமை ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்படவிருக்கும் ஆடைத்தொழிற்சாலைக்கு முன்னால் நின்று கொண்டு அங்கு வரும் இளம்பெண்களை தனது அலைபேசியில் படமெடுத்துக் கொண்டு நின்றவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Share:

மகளை துஸ்பிரயோகத்திற்குட்படுத்திய தந்தை கைது – மட்டக்களப்பில் சம்பவம்


மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோவில்போரதீவில் பிரதேசத்தில் மகளை துஸ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் தந்தை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Share:

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்


2016-03-31க்கும் முன்னர் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாததை கண்டித்தும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்ககோரியும் இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
Share:

மட்டக்களப்பு நகரில் ஐந்து வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு கொள்ளை


மட்டக்களப்பு நகரில் உள்ள ஐந்து வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டுகொள்ளையிடப்பட்டுள்ளது.
Share:

கிழக்கில் சுற்றுலாதுறையை விருத்திசெய்தால் 10ஆயிரம் பேர் தொழில்பெறமுடியும் -கி.ப.உபவேந்தர்

சுற்றுலாத்துறையை அதன் நேர்த்தியான தொழினுட்பங்களுடன் விருத்தி செய்தால் கிழக்கில் 10 ஆயிரம் இளைஞர் யுவதிகளுக்கு உடனடியாக நல்ல வருமானத்துடன் கூடிய நேரடி வேலைவாய்ப்பை வழங்க முடியும் என கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி ரீ. ஜயசிங்கம் தெரிவித்தார்.
Share:

செவ்வாய், 29 மார்ச், 2016


மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைச் செயலாளரின் நிருவாக மந்த நிலை மற்றும் நிருவாகச் சீர்கேடுகளைக் கண்டித்து பொதுமக்கள் திரண்டு செவ்வாய்க்கிழமை பிரதேச சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டப்பேரணியொன்றை நடத்தினர்.
Share:

கிழக்கு மாகாணத்தின் சிறந்த விவசாயியாக ஏறாவூரை சேர்ந்தவர் தெரிவு


மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகக் குறைந்தளவு நிலப்பரப்பைக் கொண்டுள்ள ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவிலிருந்து கிழக்கு மாகாணத்தின் சிறந்த வர்த்தக ரீதியிலான பழச் செய்கை விவசாயி தெரிவு செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் விவசாயப் போதனாசிரியை எம்.எச். முர்ஷிதா ஷிரீன் தெரிவித்தார்.
Share:

மட்டக்களப்பில் வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்


அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மட்டக்களப்பில் மாபெரும் கண்டன பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
Share:

திங்கள், 28 மார்ச், 2016

காட்டு யானை தாக்குதலை தடுப்பது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அமுல்படுத்துங்கள் - இரா.துரைரெட்னம் கோரிக்கை


மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டு யானைகளின் தாக்குதல்களை தடுப்பது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அமுல்படுத்த நடவடிக்கையெடுக்கவேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Share:

மட்டக்களப்பில் யுவதியின் சடலம் மீட்பு


மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருப்பெருந்துறையில் உள்ள விடுதி ஒன்றில் இருந்த யுவதி ஒருவர் நீர்குழி ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Share:

பழகாமம் வன்னியூரன் கவிஞர் த.ரமேஸ்குமார் எழுதிய நூல்களின் வெளியீடு

(பழுவூரான்)
வன்னியூரன் கவிஞர் த.ரமேஸ்குமார் எழுதிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்வு மட்டக்களப்பு - திருப்பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சுள்ளென்ற சூரியநேர்மை எனும் கவிதை நூல் மற்றும் கூடி விளையாடுவோம் எனும் சிறுவர் நாடக நூல் ஆகியவை இன்று வெளியிடப்பட்டன.
Share:

ஞாயிறு, 27 மார்ச், 2016

கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் தொடர்பிலும் கவனத்தில் கொள்ளுங்கள் - மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்


ஊடகத்துறை அமைச்சினால் வடக்கு நோக்கிய தென்னிலங்கை ஊடகவியலாளர்களின் பயணத்தினை வரவேற்றுள்ள மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்,கிழக்கு ஊடகவியலாளர்கள் குறித்தும் ஊடக அமைச்சு கவனத்தில் கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
Share:

வவுணதீவு,பட்டிப்பளையில் யானைகள் அட்டகாசம் -மூன்று வீடுகள் சேதம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு மற்றும் பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் இன்று அதிகாலை யானைகளின் தாக்குதல்கள் காரணமாக மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் பயிர்செய்கைகளும் அழிக்கப்பட்டுள்ளன.
Share:

தகவலறியும் சட்டத்தினை மக்கள் சரியானமுறையில் பயன்படுத்தவேண்டும் - சமூக அமைப்புக்களின் வலையமைப்பு தலைவர் எஸ். செந்தூரராஜா

தகவல் அறியும் சட்டத்தை மக்கள் சரியான முறையில் பிரயோகிக்கத் துவங்கினால் அது மக்களுக்கு மிகப் பெரிய பயனைக் கொடுப்பதோடு அதன் மூலம் இப்போதுள்ளதிலும் பார்க்க உண்மையான ஜனநாயக நல்லாட்சி மலர வழிவகுக்கும் என அபிவிருத்திக்கான சமூக அமைப்புக்களின் வலையமைப்பு  தலைவர் எஸ். செந்தூரராஜா தெரிவித்தார்.
Share:

சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் சர்வதேச நாடக தின நிகழ்வு ஆரம்பம்


சர்வதேச நாடக தின விழா மட்டக்களப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் கோலாகலமாக ஆரம்பமானது.
Share:

மண்முனைமேற்கு பிரதேசசெயலகத்திற்கு உற்பட்ட அணிகளுக்கு இடையிலான எல்லே சுற்றுப்போட்டி

மண்முனைமேற்கு பிரதேசசெயலகத்திற்கு உற்பட்ட அணிகளுக்கு இடையிலான எல்லே சுற்றுப்போட்டியானது ஈச்சந்தீவு உதயசூரியன்
விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது இதற்கு மண்முனைமேற்கு பிரதேசசெயலக விளையாட்டு உத்தியோகஸ்தர் பி.பூபாலராஜா தலைமை தாங்கினார் இவ் விளையாட்டில் முதலாம் இடத்தினை ஈச்சந்தீவு உதயசூரியன் விளையாட்டுக் கழகமும் இரண்டாம் இடத்தினை விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகமும் பெற்றுக் கொண்டது




Share:

இலவச சமய தீட்சை – தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில்



இலங்கையில் மிக உயரமா பிள்ளையார் சிலையினை உடைய தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(03.04.2016) அன்று காலை 08.30 சைவ சமய தீட்சை இலவசமாக வழங்கபட்டவுள்ளது இதனை சிவஸ்ரீ க.கு சீதாராம் குருக்கள் அவர்களும் இந்தியா ஸ்ரீ இராமேஸ்வரம் ஆலயத்தின் பாரம்பரிய அர்ச்சகர் பக்க்ஷி.சிவராஜன் அவர்களும் வழங்கி வைக்கவுள்ளனர்.இவ் சைவ சமய தீட்சை பெறவிரும் அடியார்கள். தங்களது பெயர் விபரங்களை பதிவு செய்யவும்.0770348559/0757926321.
Share:

வெள்ளி, 25 மார்ச், 2016

வவுணதீவில் சட்ட விரோத மதுபானசாலை முற்றுகை –பெருமளவான மதுபானபோத்தல்களும் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பகுதியில் சட்ட விரோதமான முறையில் இயங்கிவந்த மதுபான விற்பனை நிலையம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் அங்கிருந்து நூற்றுக்கணக்கான மதுபானபோத்தல்களும் மீட்கப்பட்டுள்ளன.
Share:

மகிழூர் கிராமத்தில் சிரமதான நிகழ்வு



(இ.சுதா)

ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளரும் முன்னாள் பிரதி அமைச்சரும் தற்போதைய வர்த்தக வணிக துறை அமைச்சின் நிபுணத்தவ ஆலோசகருமான சோமசுந்தரம் கணேசமூர்த்தியின் ஏற்பாட்டிலும் இமகிழுர் கிராம ஆலயங்களின் ஒத்துழைப்புடனும் மாபெரும் சிரமதான நிகழ்வு இன்று வெள்ளிக் கிழமை காலை7மணி முதல் 11 மணிவரை மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மகிழூர் கிராமத்தில் நடைபெற்றது.
Share:

தேற்றாத்தீவு புனிதயூதாததேயு தேவாலய சிலுவை பாதை

மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனிதயூதாததேயு தேவாலய சிலுவைபாதை இன்று(25.03.2016) குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு ,தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியுடாக தேற்றாத்தீவு புனித ஜுதா தெதயு தேவாலயத்தை வந்தடைந்தது. இயேசு துன்பங்கள் அனுபவித்து உயிர் துறந்ததினமாக பெரிய வெள்ளிக் கிழமையை கிறிஸ்தவர்கள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கின்றார்கள்.
Share:

பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பேன் - கி.மா.உ. சிப்லி பாறுக்


இஸ்லாமியர்கள் வறுமை நிலையில் உள்ளவர்களுக்கு உதவி செய்து மதமாற்றுவதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ள கருத்தை இரண்டு வாரங்களுக்குள் வாபஸ் பெறாவிட்டால், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்வேன்' என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாருக் தெரிவித்தார். 

மட்டக்களப்பு, காத்தான்குடியில் செவ்வாய்க்கிழமை(22)இரவு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், 'நல்லாட்சியில் இன உறவை மேம்படுத்துவதற்காக பல்வேறு தரப்பினரும் செயற்பட்டுவரும்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் சிலர் இவ்வாறான இனவாத கருத்துகளை தெரிவித்து வருவது இன ஐக்கியத்தை பாதிக்கும் செயற்பாடாகும். சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் பேசும் மக்கள் தொடர்பில் துவேசங்களை கதைத்து வாக்குகளைப்பெறும் நடவடிக்கையை மஹிந்த தரப்பினர் மேற்கொண்டுவருவது போல், மறுபக்கத்தில் தமிழ் மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் தொடர்பிலான துவேசங்களை கதைத்து வாக்கு பெறும் நடவடிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் போன்றவர்கள் மேற்கொண்டுவருகின்றனர்' என்றார். 

Share:

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் உண்மைக்கான உரிமைக்கான சர்வதேச தின நிகழ்வு

நிலைமாறு கால நீதியை வலியுறுத்தும் வகையில், மட்டக்களப்பு விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் சர்வதேச உண்மைக்கான உரிமைக்கான சர்வதேச தின நிகழ்வு அதன் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், விழுதின் மட்டக்களப்பு மாவட்ட திட்ட உத்தியோகத்தர் பி.முரளிதரன், மற்றும் மட்டக்களப்பு அலுவலக நிருவாக உத்தியோகத்தர் திருமதி சுபாசினி பார்த்தீபன் ஆகியோர் நிலைமாறு நீதி தொடர்பான விளக்கங்களை வழங்கினர்.

இதில், மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் மாதர் சங்கம், ஓட்டமாவடி அமரா பெண்கள் சங்கம், கல்லடி மாதர் சங்கம், மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் சமாசம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும், விழுது உத்தியோகத்தர்களும் பங்கு கொண்டனர்.

நிலைமாறுகால நீதியினை வலியுறுத்தியும், நல்லிணக்க பொறி முறையினை உறுதிப்படுத்துமாறு கோரியும் இந்த சர்வதேச உண்மைக்கான உரிமைக்கான சர்வதேச தின நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சர்வதேச ரீதியில் அனுஸ்டிக்கப்படும் சர்வதேச உண்மைக்கான உரிமைக்கான சர்வதேச தினத்தில் நிலைமாறு கால நீதிக்கான செயற்பாட்டின்  நம்பிக்கையினை மீள கட்டியெழுப்பல், மௌனத்தினை உடைத்தல், உண்மையினை வெளிப்படுத்தல்,  குற்றஞ்சாட்டப்பட்டவர்களை பொறுப்புகூற வைத்தல், பாதிக்கப்பட்டவர்களை அங்கீகரித்தல்,  நிலையான சமாதானமான சமூகத்தினை கட்டியெழுப்பல் என்பவற்றின் முக்கியத்துவம் பற்றி விளக்கங்கள் வழங்கப்பட்டன.

அத்துடன், நிலைமாறு கால நீதிக்கான தூண்களாக விளங்கும் உண்மையை அறிந்து கொள்ளும் உரிமை, நிறுவன ரீதியிலான சீர் திருத்தம், குற்ற வழக்கு தொடர்தலுடன் சம்பந்தப்பட்ட நீதியினைக் கண்டறியும் உரிமை, இழப்பீடு வழங்குதல் என்பனவற்றுக்கான தேவை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் விளக்கங்களும் வழங்கப்பட்டன.

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையமானது, நிலைமாறு கால நிதி தொடர்பில் கற்றுக் கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகள் சம்பந்தமாக தெற்கு, வடக்கு,கிழக்கு பிரதேசங்களில் அனுபவப் பகிர்வுச் செயற்பாடுகளைக் கடந்த காலங்களில் மேற்கொண்டிருந்தது.

அதே போன்று கடத்தப்பட்டுக் காணாமல் போனவர்களுடைய விபரங்கள் திரட்டுதல், பரிந்துரைச் செயற்பாடுகள், கருத்தரங்குகள் நடத்துதல், உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.





Share:

வியாழன், 24 மார்ச், 2016

பேரினவாதிகளே சிறுபான்மையினருக்கு தேசப்பற்றை இல்லாமல்செய்தனர் –பிரசன்னா இந்திரகுமார்


காலத்துக்குக் காலம் கோலோச்சிய பேரினவாத ஆட்சியாளர்களே சிறுபான்மையினரான தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இந்த நாடு மீதான பற்றை இல்லாமலாக்கினர் என கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.
Share:

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக்கினால் சுயதொழிலுக்கான தொழில் உபகரணங்கள் வழங்கிவைப்பு

2015 ஆம் ஆண்டின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் அவர்களினால் காத்தான்குடி, மண்முனை வடக்கு மற்றும் மண்முனை பற்று பிரதேசே செயலாளர் பிரிவுகளை வசிக்கும் வறிய குடும்பங்களுக்கு சுய தொழிலுக்கான இடியப்ப தொழில் உபகரணங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு காத்தான்குடி பதுரியா மைதான வளாகத்தில் அமைந்துள்ள சமூக சேவை அலுவலகத்தில்  (23.03.2016) புதன்கிழமை இடம்பெற்றது. 
Share:

பிரதியமைச்சர் அமீரலிக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் பதிலடி.

அண்மையில் ஊடகங்கள் மூலமாக பிரதியமைச்சர் அமீரலி அவர்கள். பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்‌வரனுக்கு எதிராகவும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகவும் அறிவுமயப்படாத நிலையிலும் உணர்ச்சியவப்பட்டு மலினமான, மட்டரகமான கருத்துகளைக் கொட்டியிருந்தார். அதற்காக நாம் அவரைப் போல் ஆத்திரப்படாமல் அறிவு பூர்வமாக பதிலளிக்க வேண்டிய தார்மீக கடமைப்பாட்டினை கொண்டிருக்கின்றோம். இந்த நிலையில் நாம் பிரதியமைச்சர் அமீரலியைப் போல் சிந்திக்காமல் அவரது கட்சியையோ, அவர் சார்ந்த எமது சகோதரர்களான முஸ்லிம் சமுகத்தையோ நோகடிக்க விரும்பவில்லை.. அவரது தனிப்பட்ட கருத்துகளை அவசரமான கருத்துக்களாக கருதி அவருக்கு மாத்திரம் பதிலளிக்க விரும்புகிறோம். 
Share:

கொக்கட்டிச்சோலையில் மூன்றாவது சிறுவர்,மகளிர் விவகார பிரிவு திறந்துவைப்பு



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணகருவில் சிறுவர் மகளிர் விவகார அமைச்சின் அனுசரணையுடன் பிளான் இன்டர்நஸனலின் நிதியுதவியுடன் பொலிஸ் நிலையங்களில் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவுக்கான தனி கட்டிடங்கள் அமைக்கப்பட்டுவருகின்றன.
Share:

கல்லடி - டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தின் புதிய கல்வாரி பீட திறப்புவிழா



(லியோ)

மட்டக்களப்பு கல்லடி - டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தின் புதிய கல்வாரி பீட திறப்புவிழா நிகழ்வு கடந்த 22.03.2016 பங்குத்தந்தை ரொஷான் அடிகளார் தலைமையில் நடைபெற்றது. 

இதன்போது புதிதாக திறந்துவைக்கப்பட்ட கல்வாரி பீடம் அருட்தந்தை ஜோசெப் மேரி அடிகளாரினால் ஆசீர்வதிக்கப்பட்டு முதல் திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது .

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கல்வாரி பீடத்தில் இடம்பெற்ற விசேட திருப்பலியினை இயேசு சபை துறவி அருட்தந்தை யோன் ஜோசப் மேரி,  பங்கு தந்தையும்  இயேசு சபை துறவியுமான  ரொஷான் , இருதயபுரம் பங்குதந்தை அருட்பணி ஜெகாந்தன் ஆகியோர் இணைந்து திருப்பலியினை ஒப்புகொடுத்தனர்  .

 இவ்விசேட திருப்பலியில் பங்கு சபையினரும், பங்கு மக்களும் கலந்து சிறப்பித்தனர் 
















Share:

மட்டக்களப்பு வந்தாறுமூலை நீர்முக விநாயகர் மஹா கும்பாபிஷேக பெரும் சாந்தி பெருவிழா

(சித்தாண்டி நிருபர் & மூலையூரான்)

மட்டக்களப்பு வந்தாறுமூலை அருள்மிகு ஸ்ரீ நீர்முக விநாயகர் ஆலய புனராவர்தன அஷ்டபந்தன பஞ்சகுண்ட பஷ-பிரதிஷ்ட மஹா கும்பாபிஷேக பெரும் சாந்தி பெருவிழா எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பமாகி ஏப்ரல் 03ஆம்திகதி கும்பாபிசேகம் இடம் பெறவுள்ளது.

Share:

புதன், 23 மார்ச், 2016

காந்தி விளையாட்டுக்கழகத்தின் 40ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடாத்திய கிரிக்கட் சுற்றுப்போட்டி


மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட ஆறுமுகத்தான்குடியிருப்பு காந்தி விளையாட்டுக்கழகத்தின் 40ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடாத்திய கிரிக்கட் சுற்றுப்போட்டியில் தன்னாமுனை புனித ஜோசப் விளையாட்டுக்கழகம் இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
Share:

தேற்றாத்தீவு வடபத்திரகாளி அம்மனின் தீ மிதிப்பு


தேற்றாத்தீவு வடபத்திரகாளி அம்மனின் இவ்வருட சடங்கு உச்சவத்தின் இறுதி நாள்ளாகிய  புதன்கிழமை(23.03.216 காலை இந்து சமூத்திரத்தில் கடல் குளிப்பை தொடர்ந்து தீ மிதிப்பு இடம் பெற்றது. இதில் பல்லாயிர கணக்கான அடியார்கள் கலந்து கொண்டு தமது வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.
Share:

செவ்வாய், 22 மார்ச், 2016

மட்டக்களப்பு கோட்டைமுனை புன்னையம்பதி அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயத்தின் பஞ்சரத பவனி


கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு கோட்டைமுனை புன்னையம்பதி அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயத்தின் பஞ்சரத பவனி இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
Share:

மண்டூர் 13 விக்னேஸ்வரா வித்தியாலயம் சாதனை


(இ.சுதா)

அண்மையில் வெளியான கல்விப் பொ.த.சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடப்படையில் பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள அதி கஷ்ட பிரதேச பாடசாலையான மண்டூர் 13 விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
Share:

ஒன்றரை வயதுக் குழந்தை நீர்ப் பாத்திரத்திற்குள் வீழந்து உயிரிழப்பு – மட்டக்களப்பில் சம்பவம்


மட்டக்களப்பு செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள கொம்மாதுறையில் ஒன்றரை வயதுக் குழந்தை நீர்ப் பாத்திரத்திற்குள் குப்புற விழுந்து பலியானதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
Share:

மட்டக்களப்பு பாலமீன்மடு பகுதியில் பொது அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு பாலமீன்மடு பகுதியில் மீனவர்களின் காணிகள் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு குத்தகைக்கு வழங்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மனித கழிவுகள் நிலையம் அமைக்கும் பணியை நிறுத்தக்கோரியும் குறித்த பகுதி மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Share:

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate