வியாழன், 25 மே, 2017

தேற்றாத்தீவு சிவகலை வித்தியாயலத்தின் ஆரம்ப கல்வி கற்றல் உபகரண கண்காட்சி

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு சிவகலை வித்தியாயலத்தின் ஆரம்ப கல்வி கற்றல் உபகரண கண்காட்சியானது இன்று(25.05.2017) வியாயழக்கிழமை பாடசாலையில் வித்தியாலயத்தின் அதிபர் த.சிறிதரன் தலைமையில் இடம் பெற்றது.





இவ் ஆரம்ப கல்வி கற்றல் உபகரண கண்காட்சிக்கு பட்டிருப்பு கல்வி வலயத்தின் கல்வி பணிப்பாளர் ந.புள்ளநாயகம் அவர்கள் பிரம அதிதியாக கலந்து கொண்டார். மட்டக்களப்பு தேசிய கல்வி கல்லூரியின் பீடாதிபதி சி.ராஜேந்திரன் அவர்கள் விசேட அதியாக கலந்து கொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைத்தனர்.

இவ் கண்காட்சியில் ஆரம்ப கல்வி மாணவர்கள் இலகுவான முறையில் கல்வியை கற்று விளங்க கூடிய முறையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் உருவாக்கப்பட்ட பல கற்றல் உபகரண கண்காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடதக்கவிடயம் இவ் கண்காட்சி நாளை வெள்ளிக்கிழமையும் (26.05.2017)  இடம் பெறும்.











Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate