கிழக்கிலங்கை இந்து சமய சமூக அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் நிங்கி மற்றும் நெல்லி அமைப்பின் நிதி உதவியின் கீழ் போரதீவு பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சுரவணையூற்று விநாயகர் பாலர் பாடசாலைக்கு போஷாக்கு உணவு திட்டாரம்பம் நிகழ்வு இன்று(28.05.2017) ஞாயிற்றுக்கிழமை சுரவணையூற்று விநாயகர் பாலர் பாடசாலையில் கிழக்கிலங்கை இந்து சமய சமூக அபிவிருத்தி சபையின் தலைவர் துஸ்யந்தன் தலைமையில் இடம் பெற்றது.
போஷாக்கு உணவு திட்டாரம்ப நிகழ்விற்கு பிரதம அதிதியாக கொள்கை திட்டமிடல் அமைச்சின் உதவி பணிப்பாளர் சி.தணிகசீலன் அவர்களுகம் விசேட அதிதியாக போரதீவு பற்று பிரதேச செயலக முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் ப.கமலதாஸ் அவர்களும் கலந்து கொண்டர்.இதன் போது இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் மாணவிக்கு பிறந்த தின கேக் வெட்டி கொண்டாடப்பட்டதுடன். போஷாக்கு உணவும் வழங்கப்பட்டது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக