மட்டக்களப்பில் வைத்து க்ந'த 2004 ஆண்டு சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசன் அவர்களின் 13 வது நினைவு தின நிகழ்வு காந்தி பூங்காவில் நடைபெறவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் எதிர்வரும் 03 ம் திகதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு அஞ்சலி நிகழ்வும் நடேசன் அவர்களின் படுகொலை விசாரணையை ஆரம்பிக்கவேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கத்திற்கு முன்வைத்து ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் கிருஸ்ணகுமார் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
குறித்த நிகழ்வுக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊடகவியலாளர்கள் சிவில் சமூக பிரதிநிதிகள் அரசியல்தலைமைகள் பொதுமக்கள் என அனைவரையும் கலந்துகொள்ளுமாறு வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக