ஞாயிறு, 4 அக்டோபர், 2015

கொக்குவிலில் சிறுமி துஸ்பிரயோகம் இளைஞன் கைது

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குவில் பகுதியில் 14 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்குட்படுத்திய 17வயது இளைஞர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.


மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரி.ரவீந்திரனுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமியை வைத்திய பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate