திங்கள், 23 நவம்பர், 2015

தேற்றாத்தீவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

(சிந்து)
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாதீவில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

தேற்றாத்தீவு மகா வித்தியாலய வீதியில் உள்ள வீட்டின் முன்பாகவுள்ள மாமரத்திலேயே குறித்த நபர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

தேற்றாத்தீவை சேர்ந்த க.குவிகரன்(27வயது)என்பவரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் இவர் பழுகாமத்தில் திருமணம் செய்துள்ளதாகவும்,இரு பெண்பிள்ளைகளின் தந்தை என்று பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்தலத்துக்கு சென்றுள்ள களுவாஞ்சிகுடி பொலிஸார் இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate