வெள்ளி, 27 நவம்பர், 2015

சர்வதேச உளவியல்சார் கற்கைகள் நிலையத்தின் விருது வழங்கும் நிகழ்வு

மட்டக்களப்பு சர்வதேச உளவியல்சார் கற்கைகள் நிலையம் ஏற்பாடு செய்துள்ள விருது வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 29ம்திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணிக்கு கல்லடியில் உள்ள மேற்படி அமைப்பின் கேட்போர் கூடத்தில்நடைபெறவுள்ளது.

சர்வதேச உளநல தினத்தை முன்னிட்டு அங்கோடை மனநல வைத்தியசாலையின் உளநல வைத்திய நிபுணர் எம் கணேசன்தலைமையில் நடாத்தப்பட்ட கட்டுரை கவிதைப் போட்டிகளில் முறையே முதல் 3 இடங்களையும் பெற்றவர்களுக்குபணப்பரிசும் விருதும் வழங்கப்படவுள்ளன.


மேற்படி கற்கை நிலையத்தின் பணிப்பாளர் திருமதி.ரி.பிரான்சிஸ் தலைமையில் உலக நண்பர்களின் தேவைகளுக்கானஅமைப்பின் அனுசரணையுடன் நடைபெறவுள்ள இவ்விழாவில் மட் மாவட்ட வர்த்தக விவசாய கைத்தொழில் சம்மேளனபணிப்பாளர் நாயகம் திரு.வி.ரஞ்சிதமூர்த்தி பிரதம அதிதியாகவும், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் உளநல வைத்தியர் திருமதி சுசிலா பரமகுருநாதன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் மலேரியாத்தடை இயக்க வைத்திய அதிகாரி திருமதி மேகலா ரவிச்சந்திரன், கோட்டைமுனை மத்திய மருந்தகத்தின் வைத்திய அதிகாரி செல்வி ரி.கலைச்செல்வி, இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் .ஏ.சி.ஏ.அசீஸ் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், உலக நண்பர்களின் தேவைகளுக்கான அமைப்பின் பணிப்பாளர் ஏ.கங்காதரன், மட்டக்களப்பு மேல்நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர் ஏ.ஆர்.அமான், மட்டக்களப்பு மனநல ஆற்றுப்படுத்தல் கல்லூரியின் பணிப்பாளர் எம்.நேசராஜ், கல்லடி வேலூர் கிராமசேவை உத்தியோகத்தர் ரி.சிவலிங்கம், மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள்பணிமனையின் மலேரியாத்தடை இயக்க வெளிக்கள உத்தியோகத்தர்களான ஆர் பாஸ்கரன், கே.அன்புராஜ் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.  
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate