தமிழ் தேசிய கூட்டமைப்பின் நான்காவது பொங்கல்விழா நேற்று (19.01.2017)வியாழக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பில் விமர்சையாக நடைபெற்றது.தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சுமந்திரன்,திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.துரைரெட்னசிங்கம், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்எஸ்.வியாழேந்திரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஞா.கிருஸ்ணபிள்ளை,மா.நடராஜா ஆகியோர் இந்த நிகழவில் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது கல்லடி பாலத்தில் இருந்து மாபெரும் ஊர்வலம் பொங்கல் நிகழ்வு நடைபெற்ற அரசடி தேவநாயகம் மண்டபம் வரையில் நடைபெற்றது.தமிழர்களின் கலாசார இன்னியம் இசையுடன் இந்த கலாசார பவனி நடைபெற்றதுடன் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பொங்கல் விழா மேடையில் பலதரப்பட தமிழ் கலாசார நிகழ்ச்சிகள் அதிதிகளின் உடையும் இடம் பெற்றது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக