புதன், 11 ஜனவரி, 2017

தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயத்திலும் மிக சிறப்பாக நடைபெற்ற தரம் ஒன்று மாணவர்களை வரவேற்க்கும் தேசிய நிகழ்வு

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயத்தில் இன்று (11.01.2017) புதன்கிழமை பாடசாலை அதிபர் த.சிறிதரன் தலைமையில் பாடசாலையின் ஒன்று கூடல் மண்டபத்தில் காலை 10.30 மணியளவில்  தரம் ஒன்று மாணவர்களை வரவேற்க்கும்  தேசிய நிகழ்வு ஆரம்பமானது.




இவ் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்க்கும்  தேசிய நிகழ்வுவிற்க பட்டிருப்பு கோட்டகல்வி பணிப்பாளர் என்.திரவியராஜா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.தரம் இரண்டுமாணவர்களினால் தரம் ஒன்று மாணவர்களை மாலை அணிவித்து ஒன்று கூடல் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.இதன் போது தரம் நான்கு மாணவிகளின் வரவேற்ப்பு நடனம் இடம் பெற்றது.அதை தொடர்ந்து தலைமையுரையும் பிரதம அதிதியின் உரையும் பின்னர் புதிய மாணவர்ளுக்கு புதிய பாடப்புத்தகம் பிரதம அதிதி அதிபர் மற்றும் ஆசிரியர்களினால் வழங்கப்பட்டது.













Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624937

Translate