புதன், 4 ஜனவரி, 2017

கா.நாகேந்திரனின் 'நான் பொறந்த மண்' நூல் வெளியீடு


இளம் கவிஞனர் கா.நாகேந்திரனின் ' நான் பொறந்த மண்' கவிதை நூல் வெளியீடு திங்கள் கிழமை  (2) பிற்பகல் செங்கடி மத்திய கல்லூரியின் அதிபர் கு.அருணாசலம் தலைமையில் இடம்பெற்றது.






மட்டக்களப்பு கொம்மாதுறை உமா மில் வீதியைச் சேர்ந்த கா.நாகேந்திரனின் கன்னிப் படைப்பான 'நான் பொறந்த மண்' கவிதை நூல் வெளியீட்டு வைக்கும் நிகழ்வுக்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்இ ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர்இ கல்குடா கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவிஇ மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.குறித்த கவிதை நூல் முற்றுமுழுதாக இளம் கவிஞர் கா.நாகேந்திரன் வாழும் அழகிய கொம்மாதுறை தீவையும்இ கடந்த கால யுத்தத்தின் முன்னர் மற்றும் பின்னரான காலப் பகுதியில் கொம்மாதுறை தீவு அதனோடு அண்டியதான கால மாற்றங்களை மிகவும் தெட்டத்தெளிவாக வெளிக்கொண்டு வந்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

மேலும் இதுபோன்ற எமது மண் சார்ந்த நூல்கள் உருவாக வேண்டும் என்பதுடன் எதிர் கால தமிழ் சந்ததிகளுக்கு எமது வரலாறு பாரம்பரியங்கள் முதல் எவ்வாறு இருந்து அவை தற்பொழுது எந்த நிலையில் உள்ளது என்பதை நூல்கள் உருபெடுக்கும்போது அதனை தெரிந்துகொள்ள முடிதெனவும் தெரிவித்தார்.














Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624939

Translate