வெள்ளி, 20 ஜனவரி, 2017

அடை மழையிலும் பொங்கல் விழா- ம.தெ.எ.பிரதேச செயலகத்தில்

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பொங்கல் விழா இன்று (20.01.201) வெள்ளிக்கிழமை அலுவலக முன்றலில் அடைமழையில் மத்தியிலும் மிக பிரமாண்டமான முறையில் இடம் பெற்றது.





இன் நிகழ்விற்கு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரதேச செயலாளர் கலாநிதி மூ.கோபாலரெத்திம் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.  இன் நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கலைக்கழகங்கள் விளையாட்டுக்கழகங்கள் என்பனவும் இவ் பொங்கல் விழாவில் பங்கு பற்றின.

மேலும்  மட்டக்களப்பு குருக்கள்மடம் திருவருள் ஆண்கள் சங்கத்தலைவர் திரு.க.ஞானரெத்தினம் அவர்களுக்கு பிரதேச செயலாளரினால் பொன்டை போர்தி கௌரவிக்கப்பட்டதுடன் தேற்றாத்தீவு தேனுகா கலைக்கழகத்தின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்க விடயம்.











Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624938

Translate