ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இலவச கருத்தரங்கு

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்களின் சித்தி வீதத்தினை அதிகரிக்கும் வகையில் இந்த செயலமர்வு நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பின் பிரபல வர்த்தக நிறுவனங்களான சன் பன்சி ஹவுஸ் மற்றும் கிரி கொமினிகேசன் ஆகிவற்றின் அனுசரணையுடன் இந்த செயலமர்வு நடாத்தப்பட்டது.

இந்த கருத்தரங்கினை யாழ்ப்பாணத்தின் பிரபல புலமைப்பரிசில் பரீட்சைக்கான ஆசிரியர் என்.சுந்தா நடாத்தினார்.

இதன்போது 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தமை குறிப்பிடத்தக்கது.











Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate