(மதுமிதா
இந்து பெண்கள் அனுட்டிக்கும் விரதங்களுள் சிறப்பாக விளங்குவது வரலட்சுமிவிரதமும் ஒன்றாகும். அந்த வகையில் ஆடி அல்லது ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி பூஜை நோன்பு நாளாகும். இன் நாளில் விரதம் இருந்து அம்பாளினை நினைத்து விரதம் இருப்பர் பெண்கள்.கன்னிப் பெண்கள் நல்ல கணவர் அமைய வேண்டும் என்று விரதம் இருப்பதுடன் சுமங்கலி பெண்கள் தங்களில் தாலிபாக்கியம் நிலைக்க விரம் இருப்பர்.
இந்து ஆலயங்களில் பலவற்றில் நேற்று(28.08.2015) வெள்ளிக்கிழமை இவ் வரலட்சுமி பூஜை நடைபெற்றது. தேற்றாத்தீவு வட பத்திரகாளி அம்பாள் ஆலயத்திலும் பல்லாயிரக்கணக்கான ஆடியார்கள் இவ் விரத்தை நோற்றனர். விரதத்தின் சிறப்பு பூஜையினை ஆலய பிரதம சிவஸ்ரீ வடிவேல் குருக்கள் நிகழ்த்தி வைத்தார்.











0 facebook-blogger:
கருத்துரையிடுக