களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்டபட்ட துணைநீலைவணையில் புதன் கிழமை (01) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பேக்கரிஉணவுப் பொருட்களைவிற்பனை செய்து வரும் முச்சக்கரவண்டி ஒன்றும், உந்துருளி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதனாலே இவ்விபத்து சம்பவித்துள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற துறைநீலாவணைக் கிராமத்தைச் சேர்ந்த 26 வயதுடைய கருணாநிதி ரஜிந்தன் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 facebook-blogger:
கருத்துரையிடுக