செவ்வாய், 21 மார்ச், 2017

மக்கள் விழிப்பாக இருந்தால் டெங்குவை கட்டுப்படுத்தலாம். டாக்டர் குணராஜசேகரம்

(பழுகாமம் நிருபர்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்றில் டெங்கு நோயானது கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், மக்கள் விழிப்பாக இருந்தால் டெங்குவை விரட்டியடிக்கலாம் எனவும் போரதீவுப்பற்று பொதுச்சுகாதார வைத்திய அதகாரி வே.குணராஜசேகரம் தெரிவித்துள்ளார். 



அவர் மேலும் தெரிவிக்கையில், போரதீவுப்பற்று பிரதேசத்தில் இதுவரைக்கும் 47 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் அநேகமானோர் கொழும்பு, கண்டி மற்றும் மட்டக்களப்பு நகரில் தங்கியிருந்து தொழில்புரிபவர்களாகவுள்ளனர். ஆனால் பாராதூரமான பிரச்சினைகள் இல்லை. மற்றும் இந்த பிரதேசத்தில் இதுவரையும் டெங்குவால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.  நாங்கள் இப்பிரதேச மக்களுக்கு நிறைவான அறிவுரைகளையும், அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளோம். மக்கள் தங்கள் சுற்றுப்புற சூழல் மற்றும் வீடு ஆகியவற்றை சுத்தமாகும் சுகாதாரமாக வாழ்கின்ற போது டெங்கவை விரட்டியடிக்கலாம் எனவும் தெரிவித்தார். 
Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624968

Translate