தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏறாவூர்பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய நிருவாகத் தெரிவும் இளைஞர் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு 12.03.2017 ஞாயிற்றுக்கிழமை மு.ப.10.00 மணியளவில் பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி K.அழகுராஜா தலைமையில் இடம்பெற்றது. முதலில் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து இளைஞர் உறுதியுரை,வரவேற்புரை, தலைமை உரை,அதிதிகள் உரை,இளைஞர் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல், புதிய நிர்வாக சபை தெரிவு இடம்பெற்று இறுதியாக உப செயலாளரின் நன்றியுரையுடன் நிகழ்வு சுமார் மு.ப.11.30 மணியளவில் நிறைவெய்தியது.
இதன்போது ஏறாவூர் பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்கான 2017ம் ஆண்டிற்கான தலைவராக களுவன்கேணியைச் சேர்ந்த M.நிலக்சன் அவர்களும், செயலாளராக பதவி வழியாக K.அழகுராஜா பிரதேச இளைஞர் சேவை அதிகாரி அவர்களும், பொருளாளராக வந்தாறுமூலையை சேர்ந்த S.நிரோசாந் அவர்களும், உப செயலாளராக ஆறுமுகத்தான் குடியிருப்பை சேர்ந்த N.திவாகர் அவர்களும், உபதலைவராக மயிலம்பாவெளியை சேர்ந்த S.ரேகா அவர்களும், அமைப்பாளராக சித்தாண்டியை சேர்ந்த K.தட்சணாமூர்த்தி அவர்களும், உப அமைப்பாளராக செங்கலடியை சேர்ந்த V.பிரியங்கா ஆகியோர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நியதியற் கட்டளையின் பிரகாரம் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர். இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் பிரதம அதிதியாகவும், ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திருமதி நிசாந்தி அருள்மொழி, இளைஞர் பாராளுமன்ற கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் அமைச்சர் ம.சுரேஸ்காந்தன் ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக