மட்டக்களப்புமாவட்டத்தில் தமிழ் மாணவர்களின் கல்விஅடைவுமட்டத்தினைஉயர்த்தும் நோக்கில் கிழக்கின் இளைஞர் முன்னணிஅமைப்பின் தலைவர் கணேசமூர்த்திகோபிநாத் அவர்களின் திட்டமிடலின் கீழ் பலசெயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.அதனடிப்படையில் சாதாரணதரபரீட்சைசித்திபெறும் மாணவர்களின் எண்ணிக்கையினைஅதிகரிப்பதற்காகவும்,அடைவுமட்டத்தினைஅதிகரிப்பதற்காகவும் இலவசக் கல்விக் கருத்தரங்குகளினைநடாத்திவருகின்றனர்.
இவ்வாண்டின் இறுதியில் பரீட்சைக்குதோற்றவிருக்கும் மாணவர்களினைதயார்படுத்துவதற்காகதொடர் முறையில் கருத்தரங்குதிட்டமிடப்பட்டு இம் மாதம் கருத்தரங்கின் முதலாம் தொடரானது மட்-பட்-வெல்லாவெளிகலைமகள் வித்தியாலயத்தினையும், மட்-அரசடித்தீவுவிக்னேஸ்வராவித்தியாலயத்தினையும் மையமாககொண்டு அப் பிரதேசத்தில் உள்ளபாடசாலைமாணவர்களைஒன்றிணைத்துஇம்மாதம் 11, 12ம் திகதிகளில் நடாத்தப்பட்டிருந்தன. விஞ்ஞானம்,கணிதம்,வரலாறு,தமிழ் ஆகியபாடங்களிற்கானமாதிரிப் பரீட்சைகையேடுகள் வழங்கப்பட்டுஅதற்கானதெளிவுபடுத்தல்கள் மாணவர்களிற்குவழங்கப்பட்டிருந்தது.
கடந்தஆண்டுமட்-பட்-வெல்லாவெளிகலைமகள் வித்தியாலயத்தினைமையமாககொண்டு 6 தொடர்களினைக் கொண்டகருத்தரங்கும் மற்றும் குருக்கள்மடம்,கிரான்குளம் ஆகியபிரதேசங்களிலும் இலவசக்கல்விக்கத்தரங்குகள் கிளக்கின் இளைஞர் முன்னணியினரால் நடாத்தப்பட்டுபல நூற்றுக்கணக்கானமாணவர்கள் பயன் அடைந்தமைகுறிப்படத்தக்கவிடயமாகும். இவ்வாண்டுபட்டிப்பளைபிரதேச இளைஞர்களின் வேண்டுகோளிற்கிணங்கபட்டிப்பளைப் பிரதேசத்திலும் மேலும் ஒருதொகுதிக் கருத்தரங்குஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக