புதன், 17 பிப்ரவரி, 2016

சிப்தொற புலமைப்பரிசில் கல்விக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு


(என்டன் )

வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தினால் மாணவர்களுக்கான சிப்தொற புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது .


மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  வாழ்வின் எழுச்சி வங்கி கிளைகள் ஊடாக தெரிவு செய்யப்பட  சமுர்த்தி உதவி பெரும் பயனாளிகளின் 38 பாடசால மாணவர்களுக்கான சிப்தொற புலமைப்பரிசில் கல்விக்கான ஊக்குவிப்பு  கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி . தவராஜா தலைமையில் பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது .

வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி வங்கி ஊடாக சமுர்த்தி உதவி பெரும் பயனாளிகளின் குடும்பங்களில் கல்வி பொது சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்து உயர்தர  கல்வியை தொடர்கின்ற மாணவர்களுக்கான கல்விக்கான ஊக்குவிப்பு  சிப்தொற புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் மாதாந்தம் தலா ஆயிரம் ரூபா வீதம் பதினாறு மாதங்களுக்கு சிப்தொற புலமைப்பரிசில் கொடுப்பனவு  கொடுக்கப்படவுள்ளது .

இடம்பெற்ற மாணவர்களுக்கான சிப்தொற புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில்  மண்முனை வடக்கு வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்கள முகாமைத்துவ பணிப்பாளர்  திருமதி . கிரிதராஜ் நிர்மலா , மண்முனை வடக்கு வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்கள முகாமையாளர் திருமதி. செல்வி வாமதேவன்  மற்றும் வாழ்வின் எழுச்சி வங்கி முகாமையாளர்கள் , சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ,மாணவர்கள் , பெற்றோர்  ஆகியோர் கலந்துகொண்டனர் .



















Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624938

Translate