செவ்வாய், 20 அக்டோபர், 2015

மட்டக்களப்பில் உணவு மாதிரி பரிசோதனை ஆய்வுகூடம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 120 மில்லியன் ரூபாய் செலவில்; உணவு மாதிரி பரிசோதனை ஆய்வுகூடம் அமைக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்தது. 

கிழக்கு மாகாண முதலமைச்சரும் மாகாண சுகாதார அமைச்சருமான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டின்  ஆலோசனைக்கமைய இந்த ஆய்வுகூடம் அமைக்கப்படவுள்ளது. கிழக்கு மாகாணத்தில் தனியான உணவு மாதிரி பரிசோதனை ஆய்வுகூடம் நிறுவவேண்டிய அவசியம் தொடர்பில் மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை கலந்துரையாடப்பட்டது. 

இலங்கையில் முதன்முறையாக கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவுப் பாதுகாப்பு ஆலோசனைச் சபையின் செயற்பாடுகளை மாவட்ட மட்டத்தில்  விஸ்தரிப்பது தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது. 

இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளர் கே.கருனாகரன, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் முருகானந்தம், ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் முன்னாள் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு உதவிப் பணிப்பாளர் எஸ்.நாகையா, உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு பிரதம உணவு மருந்துப் பரிசோதகர் எஸ்.ரி.அபுதாலிப் ஆகியோர் கலந்து கொண்டனர்.#
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate