2015 தேசிய கடற்கரை தூய்மைப்படுத்தும் செயற்திட்டம் இன்று காலை மட்டக்களப்பு பாசிக்குடா கடற்கரையில் செயல்படுத்தப்பட்டது.
பாசிக்குடா கடற்கரையில் காணப்பட்ட குப்பைகள் மற்றும் கழிவுப் பொருட்கள் போன்றன அகற்றப்பட்டன.
இதில் வாழைச்சேனை பிரதேச செயலாளர் திருமதி. தெ.தினேஸ், வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் எஸ்.சிஹாப்தீன், அதன் ஊழியர்கள், பிரதேச செயலக ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள், பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள், சுற்றுலாத்துறை உத்தியோகஸ்த்தர்கள், இராணுவ மற்றும் கடற்படையினர் போன்றோர்கள் பங்குபற்றினார்கள்.
மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு இதனை ஏற்பாடு செய்திருந்தது.






0 facebook-blogger:
கருத்துரையிடுக