திங்கள், 21 செப்டம்பர், 2015

“வழிகாட்டிகள் பூங்கா”விஞ்ஞான கண்காட்சி மட்டக்களப்பில்

"வழிகாட்டிகள் பூங்கா" என்ற பெயரில் மட்டக்களப்பில் மாபெரும் விஞ்ஞானக் கண்காட்சியொன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக வழிகாட்டிகள் விஞ்ஞானப் பூங்காவின் செயலாளர் கலாநிதி ரீ. மதிவேந்தன் தெரிவித்தார்.


செப்டெம்பர் 24 தொடக்கம் 27வரை மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு அருகிலுள்ள அரசினர் ஆசிரியர் கலாசாலையில் காலை 9 மணி தொடக்கம் இரவு 9 மணிவரை இக்கண்காட்சி இடம்பெறவுள்ளது.

இக்கண்காட்சியில் விஞ்ஞான மாதிரிகள், புத்தாக்கப் போட்டி , நேரடி விஞ்ஞானப் பரிசோதனைகள், கலை கலாச்சாரம் , செயற்பாடுகள் , பாரம்பரிய உணவுகளும் சிற்றுண்டிகளும், விஞ்ஞானத்தை சந்திக்கும் கலைஞன், ஆகியவற்றுடன் தினமும் காலையும் மாலையும் மட்டக்களப்பு அரங்க ஆய்வு கூடம் வழங்கும் மௌனகுருவின் “தாண்டவ தகனம்”-- மகாபாரதப் போரின் பின்னணியில் இருந்த இயற்கை அழிப்பை அடிப்படையாகக் கொண்ட நவீன நாடகம், கண்காட்சி இடம்பெறும் 4 தினங்களும் மாலை வேளையில் தினமும் வீதி நாடகங்கள் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் முதன் முறையாக இடம்பெறும் பல அம்சங்களைத் தாங்கிய இந்த விஞ்ஞானக்  கண்காட்சியை பார்வையிட்டு அறிவொளி அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள இதுவொரு சிறந்த வாய்ப்பளிக்குமென வழிகாட்டிகள் விஞ்ஞானப் பூங்காவின் தலைவர் கலாநிதி ஜெயரூபன் தெரிவித்தார்.






Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624939

Translate