இலங்கையின் கிழக்கு திசையில் வடக்குக்கு 8.7 அகலாங்கு மற்றும் கிழக்குக்கு 86.6 அகலாங்கும் இடையில் குறைந்த அழுத்தம் மையங்கொண்டுள்ளது. அழுத்தவலயத்தில் அழுத்தம் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
மேற்குறிப்பிட்ட வலயத்துக்குள் 300 கிலோமீற்றரிலிருந்து 500 கிலோமீற்றர் வேகத்தில் கடுங்காற்று வீசும் என்றும்; இடியுடன் கூடிய மழை எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் அந்நிலையம் எதிர்வு கூறியுள்ளது. ஆகையால் கிழக்கு கடற்பரப்பில் அந்த வலயத்துக்கு அப்பால் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என்று மீனவர்களுக்கும் கடலுக்கு செல்லவேண்டாம் என்று கடற்படையினருக்கும் எதிர்வு அந்நிலையம் அறிவுறுத்தியுள்ளது.







0 facebook-blogger:
கருத்துரையிடுக