வியாழன், 3 டிசம்பர், 2015

சாதாரன தரத்தில் சித்தியடையும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரச சேவையில் வேலை

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான நிகழ்வுகள் இன்று (வியாழக்கிழமை) காலை திருகோணமலை மாதுமை அம்பாள் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

கல்வி பொதுத் தராதர சாதாரன தரப் பரீட்சையில் சித்திபெறும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரச சேவையில் வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

”ஒன்றிணைந்து ஆற்றல்களை வலுவூட்டுவதற்காக” எனும் தொனிப்பொருளின் கீழ் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் விருந்தினர்களாக, கிழக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்கள ஆணையாளர் எஸ்.சுதேஸ்னர், சமூக சேவைகள் திணைக்கள உதவி பணிப்பாளர் கே.காந்தீபன் மற்றும் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் S.R.K.S.குருகுல சூரிய உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மாற்றுத் திறனாளிகளால் உருவாக்கப்பட்ட கைவினைப் பொருட்களின் கண்காட்சி திறந்து வைக்கப்பட்டதுடன் கலை நிகழ்வுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளும் நடைபெற்றது. இப்போட்டிகளில் மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

DSC_6459
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate