வியாழன், 3 டிசம்பர், 2015

மட்டக்களப்பில் விபத்து: விவசாயிகள் இருவர் படுகாயம்

மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் இன்று  இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த விவசாயிகள் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பில் நடத்தப்படும் பாடசாலை ஆசிரியர்களுக்கான செயலமர்வுக்காக கொழும்பு கல்வியமைச்சிலிருந்து அதிகாரிகள் பயணித்த வாகனம் மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதியில் வலப்பக்கமாக நின்ற இவர்கள் மீது மோதியதாக தெரியவருகின்றது.
இந்த வீதியைக் குறுக்கிட்டு சைக்கிளொன்று சென்றதால் அதை வாகனம் விலத்திச் செல்ல முற்படுகையிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
கிரான் கமநல சேவைகள் நிலையத்தில் மானிய உரம் பெறுவதற்காக வந்த முறக்கொட்டாஞ்சேனை பாலையடித்தோணாவைச் சேர்ந்த எஸ்.நல்லம்மா (வயது 59), கிண்ணயடியைச் சேர்ந்த கே.மகேஸ்வரன் (வயது 49) ஆகியோரே படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வாழைச்சேனை வாகன விபத்தில் இரு மாணவர்கள் காயம்! இராணுவ வீரர் கைது
வாழைச்சேனையில் இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை கும்புறுமூலை இராணுவ முகாமிற்கு சொந்தமான வாகனம் பாடசாலை மாணவர்கள் சென்ற துவிச்சக்கர வண்டியில் மோதுண்டதால் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தில் தரம் 08ல் கல்வி கற்கும் மாணவர்களான எம்.அனீக் மற்றும் ஏ.றிழா என்ற பாடசாலை மாணவர்கள் இருவருமே காயமடைந்தவர்கள் என்று வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த பாடசாலை மாணவர்கள் இருவரையும் சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும்,
வாகனத்தின் சாரதியான இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate