மட்டக்களப்பு இந்து குருமார் பேரவையினர் மற்றும் அரச அரசசார்பற்ற நிறுவன அதிகாரிகளினுடனான கலந்துரையாடல் மட்டக்களப்பு இந்துக்குருமார் பேரவையின் தலைவர் தலைமயில் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற மண்டபத்தில் 16.05.2015 அன்று பி.ப 2.30 மணியளவில் இறை வணக்கத்துடன் ஆரம்பமாகி நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட கலாச்சார உத்தியோகஸ்த்தர் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி , இந்து இளைஞர் மன்ற செயலாளர் , உபதலைவர் மற்றும் மட்டக்களப்பு அரச அரசசார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகஸ்த்தர்கள் இந்து இளைஞர் அமைப்பின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது எதிர்கால இந்துசமய குருமார்கள் தங்கள் கருத்துக்களையும் பதிவு செய்யும் கருத்துரையாடல் நிகழ்வும்நடைபெற்றது.
ஆலய குருமார்களின் கடமைகள் பற்றியும் ஆலய நிர்வாகிகளின் கடமைகள் பற்றியும் இந்து சமயம் தொடர்பான ஆளமான கருத்துக்கள் இதன்போது முன்வைக்கப்பட்டது.
இந்து குருமார்களால் பல கேள்விகள் வினவப்பட்ட போது அதற்கான தீர்வினை மட்டக்களப்பு மாவட்ட கலாச்சார உத்தியோகஸ்த்தர் வழங்கினார். மட்டக்களப்பு இந்துக்குருமார்களின் இந்த முயற்சியானது மென்மேலும் சமயப்பணிகளையும் சமுகப்பணிகளையும் மேற்கொண்டு வளர்ச்சிபெற வேண்டும் என ஒருமித்த குரலில் மண்டபம் நிறைந்த சபையினரால் முன்வைக்கப்பட்டது.
தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட இந்து குருமார் பேரவையில் அங்கத்துவராக மேலும் உறுப்பினர்கள் இணைந்து கொள்ளும் பட்சத்தில் இதன் சமய சமுகபணிகள் முழுஉலகிற்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் என தெரிவிக்கப்பட்டது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக