இலங்கையில் ஆழிப்பேரலை இடம்பெற்று பதினொரு வருடம் கடந்து அதே வருடம், திகதி மற்றும் திதியில் இம்முறை நினைவு தினம் வருவதினால் மட்டக்களப்பு வந்தாறுமூலை மருங்கையடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் நாளைய தினம் உயிர் நீர்த்த உறவுகளுக்காக ஆத்மா சாந்தி வேண்டி நாளை (26) சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் அனைத்தும் ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ கா.ஜெயக்குமார் குருக்கள் தலைமையில் நடைபெறயிருக்கின்றது.
ஆழிப்பேரலையில் உயிரிழந்த உறவுகளின் ஆத்மா சாந்தி வேண்டி நடைபெறும் விசேட பூசைகள் இடம்பெற்றதும். ஆலயத்தின் நிருவாக அரங்காவலர் சபையினரால் மாபெரும் அன்னதான நிகழ்வும் இடம்பெறயிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக