ஞாயிறு, 27 டிசம்பர், 2015

பகவான் ஸ்ரீ ரமண மகரிசியின் 136 வது ஆண்டு ஜெயந்தி விழா


பகவான் ஸ்ரீ ரமண மகரிசியின் 136ஆவது ஆண்டு ஜெயந்தி விழா இலங்கைக் கிளையினரால் இன்று (27) ஞாயிற்றுக்கிழமை காலை முன்னாள் இளைஞர் சேவை உதவிப் பணிப்பாளர் த.ஈஸ்வரராஜா தலைமையில் ஏறாவூர் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்றது.

திருவண்ணாமலை ஸ்ரீ ரமணாச்சிரமத்தில் நிரந்தர அனுக்கிரக விலாசத்துடன் விளங்கும் ஸ்ரீ பகவத் சந்நிதியில் மன்மத வருடம் மார்கழி 11ஆம் திகதி 27.12.2015 ஞர்யிற்றுக்கிழமை ரமண மகரிசியின் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கலந்து கொண்டார்.
மட்டக்களப்பு ஸ்ரீ ரமண மகரிசி அறப்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், கௌரவ விருந்தினர்களாக கிழக்கு மாகாண விவசாய, கால்நடை அபிவிருத்தி, மீன்பிடி, நரீர்ப்பாசனம், கூட்டுறவு அபிவிருத்தி மற்று உணவு விநியோகத்துறை அமைச்சர் கி.துரைராஜசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதே நேரம், சிறப்பு விருந்தினர்களாக கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட பீடாதிபதி கலாநிதி க.இராஜேந்திரம், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கி.குணநாயகம், ஏறாவூர் ஸ்ரீ கணேச காளிகா ஆலய பரிபாலன சபைத் தலைவர் பொ.கஜேந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து ஐயப்ப விரதத்தின் இறுதிநாள் மண்டலாபிசேக பூசை நிகழ்வுகள் சிவஸ்ரீ; வை.எஸ்.காந்தன் குருக்கள் தலைமையில் நடைபெற்றது.

















Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate