ஞாயிறு, 27 டிசம்பர், 2015

ஆட்கடத்தலுடன் தொடர்புடைய இருவருக்கு விளக்கமறியல்

மட்டக்களப்பு, சித்தாண்டிப் பிரதேசத்தில் ஆட்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த இருவர் சரணடைந்ததைத் தொடர்ந்து, அவர்கள் இருவரையும் எதிர்வரும்  ஜனவரி; மாதம் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறவூர் சுற்றுலா நீதிமன்ற பதில் நீதவான் பேரின்பம் பிறேம்நாத் நேற்று சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளார். 

சித்தாண்டி பிரதேசத்தைச் சேரந்த சுடரொளி என அழைக்கப்படும் ரெட்ணசிகாமணி புண்ணியமூர்த்தி தனது வீட்டில் இருந்த வேளை 17.07.2007 அன்று அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தார். குறித்த நபர் காணாமல் போன சம்பவத்துடன் ஐந்து பேர் தொடர்புபட்டிருப்பதாக உறவினர்கள் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையின்போது சாட்சியமளிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.   

இச்சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே இருவர் கைதுசெய்யபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மற்றுமொரு சந்தேக நபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகவதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate