வியாழன், 11 ஜூன், 2015

திராய்மடு – கொக்குவில் சமாதானத்தின் இராக்கினி அன்னை ஆலய 10 வது வருடாந்த பெருவிழா

(அமிர்தகழி நிருபர் )  
                          
மட்டக்களப்பு  திராய்மடு –  சுனாமி மீள்குடியேற்ற  கொக்குவில் சமாதானத்தின் இராக்கினி அன்னை ஆலய 10 வது வருடாந்த பெருவிழாஇன்று நடைபெற்றது .    
                     
மட்டக்களப்பு  திராய்மடு –  சுனாமி மீள்குடியேற்ற  கொக்குவில் சமாதானத்தின் இராக்கினி அன்னை ஆலய 10வது வருடாந்த பெருவிழா கடந்த 29 .05.2015  வெள்ளிக்கிழமை மாலை 05.௦௦  கொடியேற்றத்துடன் ஆரம்பமானது .

முதல் நவநாள் நிகழ்வாக திருச்செபமாலை, பிராத்தனை ,திருப்பலி என்பன இடம்பெற்றது ..

தொடர்ந்து சமாதானத்தின் இராக்கினி அன்னை ஆலய நவநாள் காலங்களில்  தினமும் மாலை 05 .15  மணிக்கு திருச்செபமாலை ,  பிராத்தனை ,திருப்பலி என்பன இடம்பெற்று அன்னையின் திரு உருவம் வழமையான வீதிகளினுடாக பவணி வந்து ஆலயத்தை வந்தடைந்ததும் நற்கருணை ஆசிர் இடம்பெறும் .

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா தலைமையில் மாணவர்களுக்கு உறுதிபூசுதல் அருட்சாதனம் வழங்கப்பட்டு திருவிழா திருப்பலி, ஒப்புக்கொடுக்கப்பட்டது.






























Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate