பல்வேறு பிரச்சினைகளை முன்நிறுத்தி அரசின் கவனத்திற்கு கொண்டுவரும் நோக்கில் மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னால் பொது மக்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.மக்களின் கோரிக்கைகள் வாசகங்களாக தாங்கிய வண்ணம் இவ் ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளனர்.
கோரிக்கைகள்:
- காணாமல் போனோரை மீட்டுக் கொடுத்தல்
- காட்டு யானைகளைக் கட்டுப்படுத்துதல் (சர்வோதய நகர், கித்துள்)
- காணி அனுமதிப்பத்திரத்தை பெற்றுத் தருதல்
- வீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் (கித்துள்)
- உள் வீதிகளை புணரமைப்பு செய்தல் (கித்துள்)
- மலசல கூடப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருதல்
- நிரந்தர குடிநீர் வசதி (சர்வோதய நகர்)
- பெண்களுக்கெதிரான துஸ்பிரயோகத்தை தடுத்து நிறுத்துதல்
போன்ற பல பிரச்சினைகளை முன்நிறுத்தி மறுமலர்ச்சி குடும்ப தலைமைத்துவ பெண்கள் அமைப்பினால் இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது













0 facebook-blogger:
கருத்துரையிடுக