மட்டக்களப்பு மாவட்டத்தின் அரச திணைக்களங்கள் மற்றும் பிரதேச செயலக அணிகளுக்கிடையில் நடத்தப்பட்ட 24 அணிகளுக் கிடையிலான அரசாங்க அதிபர் 2016 சவால் கிண்ண பத்து ஓவர்கள் கொண்ட மென்பந்து கிரிகெட் சுற்று போட்டிகள் கடந்த 21ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை நான்கு நாட்களாக மட்டக்களப்பு பாட்டாளிபுரம் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது .
நான்கு நாட்களாக இடம்பெற்ற கிரிகெட் சுற்றுபோட்டிகளில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தெரிவான மட்டக்களப்பு மாவட்ட நிலஅளவை திணைக்கள அணியும் மண்முனைப்பற்று பிரதேச செயலக அணிக்கும் இடையிலான இறுதி போட்டி கடந்த 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதன்போது இறுதி போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மண்முனைப்பற்று பிரதேச செயலக அணி களத்தடுப்பில் ஈடுபட்டதுடன், .முதலில் துடுப்பெடுத்தாடிய மாவட்ட நிலஅளவை திணைக்கள அணி பத்து ஓவர்கள் முடிவில் 69 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மண்முனைப்பற்று பிரதேச செயலக அணி பத்து ஓவர்கள் முடிவில் 66 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தினை நிறைவு செய்ததுடன், மாவட்ட நிலஅளவை திணைக்கள அணி மூன்று ஓட்டங்களால் வெற்றி பெற்று 2016 மாவட்ட அரசாங்க அதிபர் சவால் கிண்ணத்தை சுவிகரித்துக்கொண்டது. .
நடைப்பெற்று முடிந்த 2016 மாவட்ட அரசாங்க அதிபர் சவால் கிண்ண இறுதி போட்டியில் இரண்டாம் இடத்தினை மண்முனைப்பற்று பிரதேச செயலக அணியினரும், மூன்றாம் இடத்தினை இணைப்பு வெற்றி அணிகளாக மண்முனை வடக்கு பிரதேச செயலக அணியும் , நீதிமன்ற அணியினரும் பெற்றுக்கொண்டனர் .
இந்நிகழ்வில் அதிதிகளாக உதவி மாவட்ட செயலாளர் எஸ் . ரங்கநாதன், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எஸ் . நேசராசா , மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜா .மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரதேச செயலாளர் திருமதி என் .சத்தியானந்தி , உதவி பிரதேச செயலாளர் திருமதி .எல் .பிரசாந்தன் மற்றும் மாவட்டத்தின் அரச திணைக்கள உத்தியோகத்தர்களும் ,பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர் .

0 facebook-blogger:
கருத்துரையிடுக