ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

பட்டாபுரம் லக்கிஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் 20வது ஆண்டு நிறைவினையொட்டி புத்தாண்டு விளையாட்டு விழா


மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பட்டாபுரம் லக்கிஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் 20வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு மாபெரும் தமிழ் புதுவருட கலாசார விளையாட்டு விழா நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
பெரியபோரதீவு பொதுவிளையாட்டு மைதானத்தில் லக்கிஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் பே.கெங்காதரன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன்,சீ.யோகேஸ்வரன்,எஸ்.வியாழேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆன்மீக அதிதிகளாக அருட்கவியரசு விஸ்வப்பிரம்மம் வை.இ.எஸ்.காந்தன் குருக்கள்,செ.செல்வகுமார் குருக்கள்,ப.பிரேஸ்குமார் குருக்கள் ஆகியோர் கலந்துகொண்டதுடன் நிகழ்வில் அதிவிசேட அதிதிகளாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம்,கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த விளையாட்டு விழாவின்போது பல்வேறு கிராமிய விளையாட்டுகள் நடைபெற்றதுடன் கிராமத்தில் பல்வேறு சாதனை படைத்தவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
























         


Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624902

Translate