பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துச்செல்லும் இன்றைய சூழ்நிலையில் தற்காப்பு கலை பெண்களுக்கு மிக முக்கியத்துவமானது என மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பு சோட்டாக்கன் கராத்தே சங்கத்தின் தலைமையகத்தில் உள்ள உடற்பயிற்சி கூடத்தின் ஒருவருட பூர்த்தி நிகழ்வு இன்று திங்கட்கிழi மாலை நடைபெற்றது.
மட்டக்களப்பு சோட்டாக்கன் கராத்தே சங்கத்தின் பிரதம பயிற்றுவிப்பாளரும் அதன் தலைவருமான கே.ரி.பிரகாஸ் தலைலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல வசதிகளும் கொண்டதாக இந்த உடற் பயிற்சி நிலையமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள நிலையமாகவும் உள்ளது.
இதன் வருடாந்த பூர்த்தி விழாவில் மட்டக்களப்பு சோட்டாக்கன் கராத்தே சங்கத்தின் உறுப்பினர்கள்,பயிற்சி பெறுவோர்,பயிற்றுவிப்பாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது ஒரு வருடபூர்த்தியை குறிக்கும் வகையிலான கேக் வெட்டப்பட்டு நிகழ்வு சிறப்பிக்கப்பட்டது.
இதன்போது உரையாற்றிய பிரதேச செயலாளர்,
இந்த நிலையத்தினை ஆரம்பித்து நடாத்திக்கொண்டிருக்கும்போது பல்வேறு சவால்கள் ஏற்பட்டன.சிலர் இவற்றினை நடத்தவிடக்கூடாது என்ற நோக்குடன் செயற்பட்டனர்.எனினும் இது அனைவருக்கும் பயன்தரக்கூடிய விடயம் என்பதனால் இதற்கு ஆதரவினை வழங்கிவந்தேன்.எதிர்காலத்திலும் இதற்கு தேவையான உதவிகளை வழங்குவேன்.
இவ்வாறான அமைப்புகளுக்கு வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்றுபட்டு உதவவேண்டு;.
தற்காப்பு கலை என்பது பெண்களுக்கு மிகமிக முக்கியமாகும்.பெண்கள் மீதான் வன்முறைகள் அதிகரித்துச்செல்லும் நிலையில் தற்காப்பு கலையென்பது மிகமுக்கியாக நோக்கப்படவேண்டும்.
இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் பாடசாலைகளில் பெண்களுக்கு தற்காப்பு கலை கற்பிக்கப்படுகின்றது.தற்காப்பு கலையினை இங்குள்ள இளம்பெண்கள் கற்கவேண்டும். அவ்வாறு கற்கும்போது தங்களை தற்காத்துக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

0 facebook-blogger:
கருத்துரையிடுக