வெள்ளி, 15 ஜனவரி, 2016

கொம்மாதுரை விநாயகர் வித்தியலயத்தில் மாணவர் வரவேற்பு - கல்விக்காக உதவிக்கரம் கொடுத்த பழைய மாணவர்கள்


மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குப்பட்ட கொம்மாதுறை விநாயகர் வித்தியாலயத்தில் 2016 ம் ஆண்டிற்கான தரம் ஒன்றுக்கான மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு பாடசாலை வியாழக்கிழமை (14) அதிபர் திரு.எஸ்.இலட்சுமணன் தலைமையில் நடைபெற்றது. 

இப் பாடசாலையானது ஆரம்பகாலத்தில் இராணுவ முகாமினுள் காணப்பட்டதால் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்பட்டது. தற்போது இப் பாடசாலை கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருவதுடன் பௌதிக வளம் ரீதியில் இன்னும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. இந் நிலையில் பழைய மாணவர் சங்கத்தினர் பாடசாலை நிருவாகத்துடன் இணைந்து  பல செயத்திட்டங்களை செய்து வருகின்றனர். 


பௌதிக வள பற்றாக்குறை  காரணமாக இப் பிரதேச பெற்றோர்கள் பலர் இப் பாடசாலையை விரும்பாது அண்டைய பாடசாலையான செங்கலடி மத்திய கல்லூரியை நாடிச்செல்லும் நிலையில் உள்ளது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். 

எனினும் இப் பாடசாலையை ஓர் நல்ல நிலைக்கு மாற்றுவதற்காக பாடசாலை அதிபர். ஆசிரியர்களுடன் சேர்ந்து பழைய மாணவர் சங்கத்தினர் பாடுபட்டு வருகின்றனர்.

'ஒரு மாணவனின் அறிவு பாடசாலை கட்டிடங்களிலோ, பெற்றோரின் கௌரவத்திலோ இல்லை.'














Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624938

Translate