வெள்ளி, 1 ஏப்ரல், 2016

ஏறாவூரில் ஆடைத்தொழிற்சாலை ஜனாதிபதியினால் திறந்துவைப்பு


மட்டக்களப்பு ஏறாவூரில் அமைக்கப்பட்டுள்ள ஆடைத்தொழிற்சாலையினை னாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்துவைத்தார்.

கிழக்கு மாகாணசபை மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து சுமார் 200மில்லியன் ரூபா செலவில் இந்த ஆடைத்தொழிற்சாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள இளைஞர் யுவதிகள் பெருமளவான தொழில்வாய்ப்பினைப்பெற்றுக்கொள்ளமுடியும்.

இந்த நிகழ்வின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினை ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் அரசி மணிகளைக்கொண்டு உருவாக்கிய ஜனாதிபதி மைத்திபாலசிறிசேனவின் ஓவியம் ஏறாவூர் யுவதியினால் ஜனாதிபதிக்கு வழங்கிவைக்கப்பட்டது.

அத்துடன் அதிதிகளுக்கான நினைவுச்சின்னங்களும் அதிதிகளுக்கு முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட்டினால் வழங்கிவைக்கப்பட்டது.



























Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624864

Translate