திங்கள், 2 மே, 2016

“இந்துசமய அறநெறித் தொண்டர்கள் எனும் பெயரில் நாடு முழுவதிலும் இந்துசமய அறநெறிப் பாடசாலைகளில் சேவைப் பிரிவுகள்”

“என்கடன் பணி செய்து கிடப்பதே” எனக்கூறி சரியை நெறி நின்று சரியைத் தொண்டாற்றி முக்தியடைந்த திருநாவுக்கரசு நாயனாரின்;குருபூசை தினத்தையொட்டி எதிர்வரும் மே மாதம் 8 ஆந் திகதி நாடு முழுவதிலும் இயங்குகின்ற இந்து சமய அறநெறிப் பாடசாலைகளில் இந்துசமய அறநெறிப் பாடசாலை சேவைப் பிரிவுகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. 

இந்துசமய அறநெறிக் கல்விச் செயற்பாடுகளை மேலும் மேம்படுத்தி இலங்கையில் வாழும் அனைத்து இந்துச் சிறுவர்களிற்கும் இந்து சமய அறநெறிக் கல்வியை வழங்கும் நோக்குடன் சிறைச்சாலைகள் மறுசீரமைப்புஇ புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் இந்து சமய அறநெறிக் கல்வி அபிவிருத்தித் திட்டம் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் முன்னெடுக்கப்படுகின்றது. இத்திட்டத்தின் ஒர் அம்சமாக. இந்துசமய அறநெறிப் பாடசாலைகளிற்கான புதிய பாடவிதானத்தில் இந்துசமய அறநெறிப்; பாடசாலை மாணவர்களிற்கு தொண்டுபுரிதலில் அனுபவத்தைப்   பெற்றுக் கொடுத்தல் ஓர் முக்கியமான செயற்பாடாக உள்ளடக்கப்பட்டுள்ளது.  சேவைப் பிரிவில் இணைந்து தொண்டுப்பணிகளில் மாணவர்கள் ஈடுபடுவதன் மூலம் தம் வாழ்நாள் முழுவதிலும் தன்னால் இயன்ற தொண்டுகளை மேற்கொள்வதற்கு தயார்ப்படுத்தப்படுகின்றார்கள்.  மக்களிற்கான தொண்டுகளினால் மாணவர்களது விவேகம் தன்னம்பிக்கை வைராக்கியம் என்பவற்றை வளர்த்து அதனூடாக மாணவர்களது.  ஆன்மீக முன்னேற்றம் ஓழுக்கமேம்பாடு மற்றும் சமூகமயமாதல் போன்றவற்றினை விருத்தி செய்ய உதவுகின்றது.

இந்துசமய அறநெறிப்பாடசாலைகளில் கல்விகற்கும் மேற்பிரிவைச் சேர்ந்த மாணவர்களை தலைமைத் தொண்டர்களாகக் கொண்டு ஏனைய பிரிவு மாணவர்களையும் உள்ளடக்கியதாக இச்சேவைப் பிரிவு ஒவ்வொரு இந்துசமய அறநெறிப் பாடசாலைகளிலும் “இந்து சமய அறநெறித் தொண்டர்கள்” எனும் பெயரில் உருவாக்கப்படவுள்ளது.

“என்கடன் பணி செய்து கிடப்பதே” எனக்கூறி சரியை நெறி நின்று சரியைத் தொண்டாற்றி முக்தியடைந்த திருநாவுக்கரசு நாயனாரின் ;(அப்பர் சுவாமிகள்) குருபூசை தினம் எதிர்வரும் மே மாதம் இடம்பெறவுள்ளதால் அதனையொட்டி எதிர்வரும் மே மாதம் 8 ஆந் திகதி நாடு முழுவதிலும் இயங்குகின்ற இந்து சமய அறநெறிப் பாடசாலைகளில் இச்;சேவைப் பிரிவுகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.  அன்றயதினம் அப்பர் சுவாமிகளது குருபூசை தினத்தினை இந்துசமய அறநெறிப் பாடசாலைகளில் ஏற்பாடு செய்யவுள்ளதுடன் இச்சேவைப் பிரிவினை அங்குரார்ப்பணம் செய்யும் முகமாக ஆலயங்கள் அல்லது அறநெறிப் பாடசாலைகளின் சூழல்களில் சரியைத் தொண்டினை (சிரமதானப் பணி) ஒர் அடையாளச் செயற்பாடாக அறநெறிப் பாடசாலை மாணவர்களைக் கொண்டு இந்துசமய ஆலயங்களினதும்  இந்துசமய நிறுவனங்களினதும் அனுசரணையினையுடன் செயற்படுத்தப்படவுள்ளது. இந்துசமய அறநெறிப் பாடசாலைகளின்  சேவைப் பிரிவுகள் மூலமாக பல்வேறு சமூக சேவைகள் எதிர்காலத்தில் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்துசமய அறநெறிப் பாடசாலைச் சேவைப் பிரிவு தொடர்பான ஓர் கையேடும்  இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வெளியீடு செய்து வைக்கப்படவுள்ளது.

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624949

Translate