
மட்டக்களப்பு மாவட்டம் வாவியினால் துண்டாடப்பட்டு மேற்கு¸கிழக்காக ஆக பிளவுபட்டுக் கிடக்கின்றது.நீண்ட காலமாக பல்வேறு தேவைகளின் பொருட்டும் மக்;கள் வாவியின் இரு புறமும் மிகுந்த சிரமத்தின் மத்தியிலேயே பயணம் செய்து வருகின்றனர்.
இவ்வாறான மக்களின் சிரமமான போக்குவரத்தினை இலகுபடுத்த வேண்டுமென்ற தனது நீண்ட நாள் அவாவினை¸ தனது 2016 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்ட உரையில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ.ஞா.ஸ்ரீநேசன் வலியுறுத்தி உரையாற்றியிருந்தார். பாராளுமன்றத்தில் உரையாற்றியதோடு விட்டுவிடாமல் இவ்விடயத்தினை கௌரவ நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் கவனத்திற்கும் கொண்டு வந்தார். பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ.ஞா.ஸ்ரீநேசன் அவர்களின் விடா முயற்சியினால் சந்திவெளி – திகிலிவெட்டை ¸நரிப்புல்தோட்டம் - பங்குடாவெளி¸ கிண்ணையடி – முறுக்கன்தீவு ¸ மூங்கிலாற்றுப் பாலம் ( 16ம் கிராமம் - மாலையர்கட்டு) மற்றும் கிரான் பாலம் (திருத்தம்) ஆகிய பாலங்களை அமைத்துத் தருவதாக கௌரவ நிதியமைச்சர் உறுதியளித்திருந்தார்.
இதற்கமைய நேற்று (07.05.2016) உரிய அமைச்சின் பொறியியலாளர்களும் மட்டக்களப்பு திணைக்கள பொறியிலாளர்களும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ.ஞா.ஸ்ரீநேசன் அவர்களுடன் பாலம் அமையவுள்ள இடங்களை பார்வையிட்டதோடு பாலங்கள் தொடர்பான அறிக்கை மற்றும் ஆரம்ப செலவு மதிப்பீடு என்பவற்றை தயாரிப்பதில் ஈடுபட்டனர். இந் நிகழ்வுகளில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மற்றும் கௌரவ கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதற்கமைய நேற்று (07.05.2016) உரிய அமைச்சின் பொறியியலாளர்களும் மட்டக்களப்பு திணைக்கள பொறியிலாளர்களும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ.ஞா.ஸ்ரீநேசன் அவர்களுடன் பாலம் அமையவுள்ள இடங்களை பார்வையிட்டதோடு பாலங்கள் தொடர்பான அறிக்கை மற்றும் ஆரம்ப செலவு மதிப்பீடு என்பவற்றை தயாரிப்பதில் ஈடுபட்டனர். இந் நிகழ்வுகளில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மற்றும் கௌரவ கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

0 facebook-blogger:
கருத்துரையிடுக