கிழக்கிலங்கையில் வரலாற்று சிறப்பு பெற்ற முருகன் ஆலயங்களுள் ஒன்றாக திகழும் சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுதர் பேராலயத்தின் பிரணவ சரவணப் பொய்கை தீர்த்தோற்சவமானது ஆயிரக் கணக்கான அடியார்களின் அரோகரா கோசத்துடன் பக்தி பூர்வமாக இன்றைய தினம் (16) சித்தாண்டி உதயன்மூலை சரவணப் பொய்கையில் உற்சவ கால பிரதம குர சிவாகம பிரினா சிவஸ்ரீ வாமகைலாசதாச குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.
நடைபெற்ற சித்தாண்டி கந்தனின் தீர்த்தோற்சவத்தின் போது சித்தாண்டி பல்வேறுபட்ட ஏற்பாட்டாளர்களினால் தாக சாந்தி, அன்னதானம், தண்ணீர் பந்தல் போன்ற பல்வேறுபட்ட சேவைகளையும் வழங்கியிருந்தனர். இம் மாதம் 1ம் திகதியன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான சித்தாண்டி முருகப் பெருமானின் திருவிழாவானது 16 நாட்களைக் கொண்டமைந்தது.
அந்தவகையில் ஆலயத்தின் உற்சவ திருவிழாக்களில் மயில்கட்டுத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த பக்திபூர்வமான திருவிழாவாக 13ம் திகதி நடைபெற்றது.
நாட்டில் எந்தவொரு ஆலயங்களிலும் இடம்பெறாத ஒரு திருவிழாவாக மயில்கட்டுத் திருவிழா சித்தாண்டி முருகப்பெருமான் ஆலயத்தில் இடம்பெறுவது முக்கிய சிறப்பு வாய்ந்தொன்றாகும்.
மயில் கட்டுத் திருவிழா காண்பதற்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் வருகைதருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சித்தாண்டி சித்திர வேலாயுதர் பேராலயத்தின் ஒவ்வொரு நாளுக்குரிய திருவிழாக்கள்; அனைத்தும் குடி மக்களினால் நடைபெற்றது.
ஆலயத்தின் உற்சவ காலத்தில் விசேட கூட்டு வழிபாடுகள். ஆன்மீக நற்சிந்தனைகள். பக்தி கலை நிகழ்வுகள் என்பன இடம்பெற்றது.
ஆலயத்தின் இவ்வருட உற்சவ கால திருவிழாவுக்கான நிருவாக நடவடிக்கை அனைத்தையும் மாவட்ட செயலகத்தின் பணிப்புரைக்கு அமைய செங்கலடி பிரதேச செயலாளர் உ.உதயசிறி தலைமையில் செங்கலடி செயலகம் பொறுப்பேற்று நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக